தமிழர் விடயத்தில் ராஜபக்ச வழியிலேயே அநுர: இடதுசாரி தலைவர் குற்றச்சாட்டு!
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டத்தில் ராஜபக்ச அரசாங்கம் கையாண்ட சில்லறைத்தனமான அணுகுமுறையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பின்பற்றிவருகின்றது என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் குறித்து வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “வீதி அமைத்தல், பாலம் அமைத்தல் போன்ற அபிவிருத்தி திட்டங்களே தேசிய இனப்பிரச்சினைக்கான அணுகுமுறையென ராஜபக்ச அரசாங்கம் கருதியது. ஆனால் அந்த சில்லறைத்தனமான அணுகுமுறையை […]













