கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 10 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, 10 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பல பகுதிகளில் மழை நீடித்ததால், பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய தென் மாவட்டங்கள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் மக்களின் […]













