கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, 10 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 10 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை

  • August 6, 2026
  • 0 Comments

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, 10 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பல பகுதிகளில் மழை நீடித்ததால், பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய தென் மாவட்டங்கள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் மக்களின் […]

மியான்மரின் இராணுவப் ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லேங்க் (Min Aung Hlaing) தாய்லாந்திற்குவிஜயம் மேற்கொண்டுள்ளார். உலகம் செய்தி

மியான்மர் இராணுவ ஆட்சியாளர் தாய்லாந்து விஜயம்

  • August 6, 2026
  • 0 Comments

மியான்மரின் இராணுவப் ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லேங்க் (Min Aung Hlaing) தாய்லாந்திற்குவிஜயம் மேற்கொண்டுள்ளார். 2021-ஆம் ஆண்டில் ஆங் சாங் சூச்சியின் (Aung San Suu Kyi) தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அவர் தாய்லாந்து செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நாட்டில் உள்நாட்டுப் போரை மூட்டியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் சீரழிந்தது. 2017-ஆம் ஆண்டில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டதில் தொடர்புடையவர் என்பதால் ஏற்கனவே […]

தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார். செய்தி விளையாட்டு

திட்டத்தை கைவிட்டு மன்னிப்பு கோரினார் FIFA தலைவர்

  • August 6, 2026
  • 0 Comments

தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும், மொராக்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அதிகாரிகளின் பெற்றதால் அவரின் தலைமைப் பதவிக்கு ஆபத்து எதுவும் வரவில்லை. FIFA தலைவராக அவரே நீடிப்பார். தான் கொண்டு வந்த திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பலத்த விமர்சனங்களை அடுத்து, புதன்கிழமை மொராக்கோவின் ரபாத் நகரில் உள்ள FIFA வின் ஆப்பிரிக்க அலுவலகத்திற்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களை […]

மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக ஆஸ்திரியாவில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேவேளை ஹங்கேரியில் மக்கள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டுள்ளனர். ஐரோப்பா செய்தி

ஆஸ்திரியாவிலும் தீவிரமடையும் வெப்ப அலை

  • August 6, 2026
  • 0 Comments

மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக ஆஸ்திரியாவில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேவேளை ஹங்கேரியில் மக்கள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டுள்ளனர். உலகின் மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமான ஐரோப்பா, இந்த கோடைகாலம் முழுவதும் சாதனை அளவிலான வெப்பத்தாலும் அழிவுகரமான காட்டுத்தீகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது […]

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின் ரமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செய்தி விளையாட்டு

வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்

  • August 6, 2026
  • 0 Comments

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின் ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் (Commonwealth Games) தங்கம் வென்றதன் மூலம் அவர் இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கை தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைருமேஷ் தரங்க படைத்துள்ளார்.

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

குளவிக் கொட்டு: திருகோணமலையில் 30 மாணவர்கள் பாதிப்பு

  • August 6, 2026
  • 0 Comments

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வளைகுடா எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

  • August 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாஷிங்டனின் மிக நெருங்கிய பிராந்திய நட்பு நாடுகளை அச்சுறுத்துவதன் மூலம், ராணுவ நடவடிக்கையின் விளைவுகளை அமெரிக்காவிற்கு உணர்த்த ஈரான் முற்படுகின்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஜூலை 28 அன்று, ஈரானின் எரிசக்தி வலையமைப்பு மற்றும் உள்கட்டமைப்புகளைத் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் தமது கட்சியின் உறுப்பினர் லால் விஜேநாயக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர் கட்சியின் பொது நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும்: நீதி அமைச்சர் உறுதி

  • August 6, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் தமது கட்சியின் உறுப்பினர் லால் விஜேநாயக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர் கட்சியின் பொது நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: “எமது அரசாங்கத்திற்குள் உள்ளவர்களுக்கு இடையே வெவ்வேறான கருத்துகள் இருந்தாலும், இறுதியில் அனைவரும் பொதுவான ஒரு நிலைப்பாட்டையே ஏற்போம். இதுவே உண்மையான ஜனநாயகப் பண்பாடாகும். […]

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலையையும், அங்கு கொல்லப்பட்ட 53 பேருக்கான நினைவுத் தூபியையும் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நேற்று புதன்கிழமையுடன் நீக்கப்படுகின்றது என்று நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலை அமைப்புக்கான தடை நீக்கம்

  • August 6, 2026
  • 0 Comments

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலையையும், அங்கு கொல்லப்பட்ட 53 பேருக்கான நினைவுத் தூபியையும் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நேற்று புதன்கிழமையுடன் நீக்கப்படுகின்றது என்று நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கடந்த ஜூலை 25 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43ஆவது நினைவு நாளில் சிலை நிறுவுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிடையில், கடந்த ஜூலை 22 அன்று வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப […]

செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 08 அடையாளம்

  • August 5, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44 ஆவது நாளான இன்று அகழ்வுப் பணி இடம்பெற்றது. இதன்போது 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதற்கமைய செம்மணி புதைகுழியில் இதுவரை மொத்தமாக 491 என்பு […]