இந்தியா செய்தி தமிழ்நாடு

பாஜகவில் இருந்து விலகுகிறார் அண்ணாமலை?

  • June 2, 2026
  • 0 Comments

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றமை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அண்ணாமலை, அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், தமிழகம் முழுவதும் பாஜக வளர்வதற்கு முக்கிய பங்காற்றினார். இதனால், இளைஞர்களின் […]

அரசியல் இலங்கை செய்தி

அரசியலில் இருந்து ஒதுங்குவேன்: கம்மன்பில பரபரப்பு அறிவிப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஒரு சபையையேனும் கைப்பற்றினால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்.” – என்று சவால் விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மேல் மற்றும் வடமத்திய மாகாணசபைகளில் மட்டுமே சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் ஆளுங்கட்சியினரின் சொத்து […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மேற்குகரை வன்முறை: இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியா தடை!

  • June 2, 2026
  • 0 Comments

பாலஸ்தீனப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிரொலியாக, மேற்கு கரையில் (West Bank) உள்ள இஸ்ரேலிய குடியேற்ற விவசாய புறக்காவல் நிலையங்கள் (farming outposts) மீது ஆஸ்திரேலியா முதன்முறையாக தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நான்கு பண்ணை புறக்காவல் நிலையங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது ராஜதந்திர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சொத்துக்களை அழித்தல் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் போன்ற செயல்களைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று […]

இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 263 எலும்புக்கூடுகள் அடையாளம்!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 263ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன. இதன்போது, புதிதாக என்புத்தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேலதிகமாக மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: மயான எரிதகன மேடையின் அத்திவாரம் இடிந்து வீழ்ந்தது!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின்போது எரிதகன மேடைக்கு அருகில் பல மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் புதைகுழியானது எரிதகன மேடையின் அத்திவாரம் வரை நீண்டு சென்றிருந்த நிலையிலேயே, தற்போது அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் […]

உலகம் செய்தி

லெபனானிலும் போர் நிறுத்தத்தைக் கோருகிறது ஈரான்!

  • June 1, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது லெபனான் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கமைய குறிப்பிட்ட ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்தப் போர்நிறுத்தத்தை மீறுவதற்குச் சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனான், பெய்ரூட் மீது தரைவழித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பானது, ஈரான் […]

அரசியல் செய்தி

யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்துக்கும் ஆளுநருக்கும் தொடர்பா?

  • June 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது. நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டி […]

உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன் ஜப்பான் பிரதமர் அவசர பேச்சு!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையைக் காட்டுமாறு ஈரானிடம், ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான் ஜனாதிபதிக்கும் Masoud Pezeshkian , ஜப்பான் பிரதமருக்கும்  Sanae Takaichi  இடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்குமாறு இதன்போது ஜப்பான் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிய நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் கடல்சார் வணிகப் பாதுகாப்பு குறித்து இந்த ஆலோசனையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. […]

இலங்கை செய்தி

சங்க நீதிமன்றம் வேண்டும்: ஞானசார தேரர் வலியுறுத்து!

  • June 1, 2026
  • 0 Comments

பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சங்க நீதிமன்றம் போன்ற பொறிமுறை இன்றியமையாததாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “பௌத்தம் என்பது மிகவும் சுதந்திரமான, ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு தத்துவமாகும். தனது குருவைக்கூட விமர்சிப்பதற்கு சுதந்திரம் வழங்கிய மதமாகும். இத்தகைய தாராளத்தன்மையைப் பயன்படுத்தி ஒரு சிலர் பௌத்தத்தையும் பிக்குகளையும் அவமதிக்கும் செயல்களில் […]

இலங்கை செய்தி

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வெசாக் கூடுகள் உடைப்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

  • June 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகளே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோாரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்குச் […]