உலகம் செய்தி

ட்ரம்புக்கு ‘ஐஸ்’ வைத்த லெபனான் ஜனாதிபதி!

  • April 16, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் பதற்றத்தைத் தணித்து போர்நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு லெபனான் ஜனாதிபதி Joseph Aoun நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இவ்வாறு நன்றி கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து, லெபனானில் நிலையான அமைதியை நிலைநாட்ட விரும்புவதாக இதன்போது ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த லெபனான் ஜனாதிபதி, இதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என உறுதியளித்தார். பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் நெருக்கடி – கோடை விமானப் பயணங்கள் பாதிக்கப்படுமா?

  • April 16, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் கையிருப்பு வெறும் ஆறு வாரங்களுக்கு மட்டுமே இருப்பதாக சர்வதேச எரிசக்தி துறை வட்டாரங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், கோடை விடுமுறைக்கான விமானப் பயணங்களில் இரத்துகள் மற்றும் கட்டண உயர்வுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாரிஸில் செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் ஃபாத்திஹ் பிரோல், மத்திய கிழக்கு மோதல்களின் காரணமாக ஜெட் எரிபொருள் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதேபோன்ற கவலைகளை முன்பே விமானத் துறையும் வெளிப்படுத்தியிருந்தது. […]

இந்தியா

தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

  • April 16, 2026
  • 0 Comments

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைமூலம் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 இல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தொகுதி மறுவரையறை சட்டமூலம் 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் முன்வைத்தார். இச்சட்டமூலத்துக்கு தமிழக அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. தமிழக கட்சிகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் மேற்படி சட்டமூலம்மீதான விவாதத்தில் உரையாற்றிய அமித் ஷா, “ஐந்து தென்மாநிலங்களில் தற்போது 129 மக்களவைத் […]

இலங்கை செய்தி

அன்னை பூபதிக்கு தமிழர் தலைநகரில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

  • April 16, 2026
  • 0 Comments

அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன் கோவிலடியை சென்றடைந்தது. இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் இருந்து […]

உலகம் செய்தி

ஈரானின் மிக முக்கிய இலக்குகளை தாக்குவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை!

  • April 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது ஈரான் இணக்கத்துக்குவர தவறும் பட்சத்தில் அந்நாடு மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நடவடிக்கையின்போது தாக்காத மிக முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு இஸ்ரேல் தயாராகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எதிர்காலம் தற்போது அதன் கைகளிலேயே உள்ளது எனவும், தவறான முடிவை எடுத்தால் தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் israel katz எச்சரித்துள்ளார்.

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தீவிரம் -பாதுகாப்பு  குறித்து தளபதி விளக்கம்

  • April 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிராந்திய பொறுப்புத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், அந்தப் பகுதியில் மேற்கொண்ட தனது அண்மைய பயணம் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த பதினைந்து நாட்களுக்குள் அவர் இரண்டு முறை மத்திய கிழக்கு பகுதிக்கு சென்று, அங்கு நிலைமைகளை நேரில் ஆய்வு செய்ததாக தெரிவித்துள்ளார். தனது பயணத்தின் போது, அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத் துருப்புகளுடன் நேரடியாக சந்திப்புகள் நடத்தப்பட்டதாகவும், அவர்களின் செயற்பாடுகள், தயார்நிலை மற்றும் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து விரிவாகக் […]

செய்தி விளையாட்டு

அமெரிக்காவில் களமிறங்கும் ஈரான் வீரர்கள்?

  • April 16, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்பதற்கு ஈரான் அணி அமெரிக்கா வரும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் FIFA நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் அணி அமெரிக்காவில் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போட்டிகளை, மெக்சிகோவுக்கு மாற்றுமாறு FIFA விடம் ஈரான் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் ஈரான் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் வழங்கப்படும் என்றும், அவர்கள் திட்டமிட்டபடி அமெரிக்காவிற்குப் பயணம் செய்வார்கள் என்றும் FIFA தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் தற்காலிக போர் […]

உலகம் செய்தி

உலகம் ஒரு சில கொடுங்கோலர்களால் சூறையாடப்படுகிறது!

  • April 16, 2026
  • 0 Comments

பாப்பரசர் போப் லியோ, போர்களுக்காக அதிகளவில் செலவிடும் உலகத் தலைவர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார். கேமரூனில் ஆற்றிய உரையின்போது, ​​உலகம் “ஒரு சில கொடுங்கோலர்களால் சூறையாடப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். மோதல்களை நியாயப்படுத்த மத ரீதியான மொழியைப் பயன்படுத்தும் தலைவர்களை அவர் கண்டித்ததோடு,  மோதலால் பாதிக்கப்பட்ட  பிராந்தியத்தில் “தீர்மானமான கொள்கை மாற்றத்திற்கு” அழைப்பு விடுத்தார். மருத்துவம், கல்வி மற்றும் மறுசீரமைப்புக்கான வளங்களோடு ஒப்பிடுகையில், கொலை மற்றும் பேரழிவுகளுக்காக” பெரும் தொகை பணம் செலவழிக்கப்படுவதையும் போப்பாண்டவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்க […]

ஐரோப்பா

அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டச் சரிவால் ஐரோப்பாவிற்கு காத்திருக்கும் ஆபத்து!

  • April 16, 2026
  • 0 Comments

அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டச் சரிவானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர் வாலண்டின் போர்ட்மேன் இன்ரியா  ( Dr Valentin Portman Inria) தலைமையிலான குழு தொடர்புடைய ஆய்வை முன்னெடுத்திருந்தது. ஆய்வின்படி மெரிடியனல் ஓவர்டேர்னிங் சர்குலேஷன் (Amoc) சரிவடைவதற்கான வாய்ப்பு முன்னர் கணிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் Amoc அதன் முடங்கும் நிலையை அடையக்கூடும் என்றும், 2100-ஆம் ஆண்டிற்குள் அதன் வேகம் 42-58 சதவீதம் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த […]

இலங்கை செய்தி

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

  • April 16, 2026
  • 0 Comments

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீர்செய்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!