உலகம் முக்கிய செய்திகள்

ஈரான் உச்ச தலைவரின் உடல்நிலையில் பாதிப்பு -முழு அதிகாரமும் IRGCயின் வசம்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei) படுகாயமடைந்துள்ளதாகவும், மார்ச் மாதம் பதவியேற்றதிலிருந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது. அவருக்கு காலில் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை கையொன்றிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகம் மற்றும் உதட்டில் தீக்காயம் உள்ளதாகவும்  இதனால் பேசுவது கடினமாக உள்ளதாகவும் நான்கு மூத்த ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில்  கமெனி, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) தளபதிகளுக்கு முக்கிய முடிவெடுக்கும் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு விவகாரம்: ரஷ்யா–பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

  • April 24, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்‌ ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் முன்பாகவே இந்த உரையாடல் நடைபெற்றது. ஈரான்–அமெரிக்கா இடையிலான நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இஸ்லாமாபாத் மேற்கொண்டு வரும் மத்தியஸ்தப் பங்கினை லாவ்ரோ பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முயற்சிகளுக்கு மாஸ்கோ முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு […]

உலகம் செய்தி

அமெரிக்கா கப்பலை இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் – ஈரான் குற்றச்சாட்டு

  • April 24, 2026
  • 0 Comments

‘தௌஸ்கா’ என்ற வர்த்தகக் கப்பலை அமெரிக்கா இடைமறித்தது சர்வதேச சட்ட மீறல் என்று ஐ.நா-வில் உள்ள ஈரானின் தூதரகம், குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் கடற்படை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த கப்பலின் பெயர் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கைக்கு பதிலளிக்காததால் அந்த கப்பல் இடைமறிக்கப்பட்டது என்று கூறியிருந்தார். ஆனால், ஈரானின் ஐ.நா தூதரகம் […]

ஐரோப்பா

யூத வெறுப்பு சம்பவம் : பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பு!

  • April 24, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் யூத வெறுப்பு சம்பவத்துடன் தொடர்புடைய  48 வயதான ஷஃபிக் ரஹ்மானுக்கு தற்காலிகமாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான ஷஃபிக் ரஹ்மான் (Shafiq Rahman) தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில், வழக்கின் தீர்ப்பை  ஜூலை 10 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார். அதுவரை அவரை தற்காலிக பிணையில் செல்ல அனுமதிப்பதாகவும் கூறியுள்ளார். ரஹ்மான், மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, ​​யூத-விரோத சொற்களை கூறி கத்தியதாகவும், […]

இலங்கை முக்கிய செய்திகள்

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயம்!

  • April 24, 2026
  • 0 Comments

இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் திறைசேரியால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் நம்பகமான தரப்பாக நடித்து, தவறான தகவல்களை அளித்து குறித்த பணத்தை  கொள்ளையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் பணத்தை மீட்க வேண்டியிருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மக்கள் மத்தியில்  […]

உலகம்

ஐரோப்பாவும், ஆசியாவும் நன்றிக் கெட்டவை – பீட் ஹெக்ஸெத் விசனம்!

  • April 24, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவுமாறு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியுள்ளார். ஈரானில் தனது இராணுவ முயற்சிகளுக்கு உதவாததற்காகவும், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க உதவத் தவறியதற்காகவும் ஐரோப்பிய நாடுகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பில் இன்று செய்தியாளர்களிடம்  கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் ஐரோப்பாவை நம்பியிருக்கவில்லை, ஆனால் எங்களை விட அவர்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் தேவைப்படுகிறது. அவர்கள் ஐரோப்பாவில் குறைவாகப் பேசுவதையும், ஆடம்பரமான மாநாடுகளை நடத்துவதையும் குறைத்துக்கொண்டு, […]

ஐரோப்பா

மென்செஸ்டரில் (Manchester) உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து!

  • April 24, 2026
  • 0 Comments

மென்செஸ்டரில் (Manchester) உள்ள தொழிற்சாலையொன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா செய்தி

மேற்காசிய போர்: இந்தியாவில் 3 நாள் விசேட மாநாடு!

  • April 24, 2026
  • 0 Comments

இந்திய தூதரக தலைவர்கள் மாநாடு புதுடெல்லியில் எதிர்வரும ஏப்ரல் 28 முதல் 30 வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. உலக நாடுகளில் இந்திய தூதுவர்களாக சேவையாற்றுபவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் முதல் நாள், வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி மற்றும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவும் ஈரானும் முற்றுகையிட்டு உள்ளதால் ஏற்படும் கடுமையான பொருளாதார பின்விளைவுகள் ஆகியவை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கமளிக்கவுள்ளார். இரண்டாம் நாள் […]

உலகம் செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சரின் பிராந்திய சுற்றுப்பயணம் – இஸ்லாமாபாத் விஜயம் உறுதி

  • April 24, 2026
  • 0 Comments

ஈரான் அரசு,  வெளியுறவு அமைச்சர் இன்று இரவு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்துள்ளது. அவர் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, இந்தப் பயணம் ஒரு பிராந்திய சுற்றுப்பயணத்தின் பகுதியாகும். அதில் அவர் ஓமான் நாட்டின் மஸ்கட் நகருக்கும், ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கும் செல்கிறார். இந்தப் பயணங்களில் இருதரப்பு உறவுகள், பிராந்திய நிலவரங்கள் மற்றும் ஈரானைச் சுற்றியுள்ள தற்போதைய மோதல் நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனினும், பாகிஸ்தானில் அமெரிக்கா […]

இலங்கை செய்தி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகர்கிறது வடக்கு!

  • April 24, 2026
  • 0 Comments

‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.04.2026) நடைபெற்றது. வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு மற்றும் திட்டமிடல் குறித்து ஜப்பானின் ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் மற்றும் இலங்கையின் கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் அண்ட் ஆர்க்கிடெக்ட்ஸ் […]

error: Content is protected !!