பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாரசீக வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்: ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்கா முடிவு

  • July 13, 2026
  • 0 Comments

பாரசீக வளைகுடா மற்றும் அதற்கு அப்பாலுள்ள ஈரானியக் கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கு மிக முக்கிய ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடும் என்றும், அதைக் கண்காணிப்பதற்கான கட்டணத்தை ஏனைய நாடுகள் அமெரிக்காவிற்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) […]

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது. செய்தி

ஹேர்முஸ் நீரிணை நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்கமாட்டோம்: ஈரான் திட்டவட்டம்

  • July 13, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது. ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த நீரிணையில் அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் “அபாயகரமான நடவடிக்கைகள்”, பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பெருமளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை நாங்கள் அனுமதிக்கவில்லை, இனிமேலும் அனுமதிக்க மாட்டோம் […]

2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி

  • July 13, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சரிவு மேலும் அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2019-ஆம் ஆண்டில் 319,010 குழந்தைகள் உயிருடன் பிறந்தன. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 301,706 […]

இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார். உலகம் செய்தி

ஈரான்மீது சக்திவாய்ந்த தாக்குதல்: ட்ரம்ப் சபதம்

  • July 13, 2026
  • 0 Comments

இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார். “அது ஒரு முடிவுற்ற ஒப்பந்தமாக (Done deal) இருந்தது, ஆனால் அவர்கள் அதனை முறித்துக் கொண்டனர். அவர்கள் எப்போதும் அதைத்தான் செய்கிறார்கள். இந்த மக்களுடன் நாங்கள் 10 ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் – எனவே, நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு

  • July 13, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தலா 20 லட்சம் ரூபாவுக்கு மேல் இழப்பீடு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேற்படி மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோதலில் காயமடைந்த அதிகாரிகளுள் எழுவர் இன்னும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது தடிகள், கூரிய ஆயுதங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. கலவர தினத்தன்று சமயல் அறைக்குள் புகுந்து அங்கிருந்த […]

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன. அரசியல் இலங்கை செய்தி

3 முக்கிய விடயங்களுக்காகவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு

  • July 13, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன. இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும் தலைவர்கள் இன்று மதியம் கொழும்பு – பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரே மேசையிலிருந்து வெளியிட்டனர். இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் […]

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்திற்கு முன்பாக இன்று (13) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செய்தி

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பை மீளாய்வு செய்யக்கோரி போராட்டம்

  • July 13, 2026
  • 0 Comments

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்திற்கு முன்பாக இன்று (13) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. “நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்”, “தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு வேண்டும்”, “அநுர ஆட்சியில் அநீதியா?” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்கவைத் (HEMWG Dissanayake) தொடர்பு கொண்டு கேட்டபோது: “குறித்த நியமன விவகாரமானது […]

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி பிரார்த்தனையின் போது காணப்பட்ட மர்மமான முகமூடி அணிந்த நபரின் அடையாளம் குறித்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன. செய்தி

அலி கமேனியின் இறுதி பிரார்த்தனையின் போது முகமூடி அணிந்து காணப்பட்ட மர்ம நபர் யார்?

  • July 13, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி பிரார்த்தனையின் போது காணப்பட்ட மர்மமான முகமூடி அணிந்த நபரின் அடையாளம் குறித்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன. ஈரானிய ஊடக அறிக்கைகளின்படி, முகமூடி அணிந்த அந்த நபர், அலி கமேனியின் மூத்த மகனான முஸ்தபா கமேனியின் மகனும், அவரது கொள்ளுப் பேரனுமான முகமது ஜாவத் கமேனி ஆவார். பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் அலி கமேனி வீரமரணம் அடைந்தார். அந்தத் தாக்குதல்களில் […]

கிண்ணியாவில் இருந்து மகாவலி ஆற்றை கடந்து , மணல் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் , நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை செய்தி

மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற STF அதிகாரி நீரில் மூழ்கி பலி

  • July 13, 2026
  • 0 Comments

கிண்ணியாவில் இருந்து மகாவலி ஆற்றை கடந்து , மணல் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் , நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் விசேட பொலிஸ் அதிரடிப்படை கந்தளாய் சூரியபுர முகாமில் கடமையாற்றி வரும் 67763 சாந்த கிஹான் ரணசிங்க (39வயது) என அடையாளம் காணப் பட்டுள்ளார். பத்தரமுல்ல ஜெயவதன கமவை சேர்ந்த இந்த பொலிஸ் சார்ஜன் அடங்கிய குழு […]

ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு

  • July 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜூலை 16 ஆம் திகதி பிரான்சுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும் இந்தப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. முன்னதாக இந்தப் பயணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டு, பின்னர் பிற்போடப்பட்டிருந்தது.