இலங்கை முக்கிய செய்திகள்

ஹொரணை முதியோர் இல்லத்தில் பாரிய தீவிபத்து – எரிகாயங்களுடன் பலரின் உடல்கள் காணப்படுவதாக தகவல்!

  • June 3, 2026
  • 0 Comments

ஹொரணை – பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 55 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் 11 பேர் காணாமல்போயுள்ளதாகவும், எரிந்த நிலையில் பலரின் உடல்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகம்

இந்தோனேசியாவில் குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து – 300 குடும்பங்கள் பாதிப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நேற்று இரவு குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 03 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெரிசலாக காணப்படும் அந்த பகுதியில் 250 வீடுகள் தீயில் எரிந்து அழிந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அங்கு வசித்து வந்த 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகவும் இந்தோனேசிய தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய ஜகார்த்தா பெருநகர துணை மண்டல காவல்துறை, மக்களை வெளியேற்றவும் அப்பகுதியைப் பாதுகாக்கவும் […]

இந்தியா

டெல்லியில் பற்றி எரிந்த உணவகம் : 20 பேர் உயிரிழப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

டெல்லியில் பிரபல உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் ஏறக்குறைய 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த தீவிபத்து இன்று அதிகாலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 04 பேரின்  உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏறக்குறைய 08 பேர் சிசிக்சைக்காக அனுப்பட்டுள்ளதாகவும் டெல்லி மாநகராட்சி (DDMA) துணை மாவட்ட ஆட்சியர் (SDM) ஜிதேந்திர குமார் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஏற்பட்ட தீ பின்னர் மேல் தளங்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் […]

ஐரோப்பா

லண்டன் – பல்பொருள் அங்காடியில் தீவிபத்து!

  • May 27, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இன்று பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, பெரிய அளவிலான அவசரகால மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 100 தீயணைப்பு வீரர்களும் 15 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மின்சார கோளாறினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தினால் எ்வ்வித காயங்களும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் புகை மூட்டம் காரணமாக மக்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

லண்டனில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீவிபத்து – 07 பேர் வைத்தியசாலையில்!

  • May 20, 2026
  • 0 Comments

லண்டனில் A5 சாலைக்கு அருகில் அமைந்துள்ள ஃபால்கிர்க் ஹவுஸில் (Falkirk House) தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அக்கட்டிடத்தில் இருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீவிபத்து சம்பவம்  இன்று காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கட்டிடத்தின் 05 ஆவது மாடியில் தீவிபத்து கண்டறியப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் உடனடியாக தீயணைப்பு துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர்   விபத்தால் காயமடைந்த 07 பேரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.  அதேநேரம்  மேலும் 15 பேர் […]

உலகம்

தாய்லாந்தில் ரயிலுடன் மோதிய பேருந்து – பாரிய தீவிபத்தில் பலர் பலி!

  • May 16, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் ரயில் ஒன்றுடன் பயணிகள் பேருந்து ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்து இன்று நிகழ்ந்துள்ளது. இதில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் அருகில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களும் தீவிபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீயில் கருகி இரு குழந்தைகள் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton) உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைப் பிரிவினர், அந்த வீட்டிலிருந்து 02 குழந்தைகளை மீட்டனர்.  இருப்பினும் குழந்தைகள் இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளும் பெண் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் குறித்த  வீட்டைச் சுற்றி வளைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை செய்தி

கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவல்

  • February 26, 2026
  • 0 Comments

வத்தளை, கெரவலப்பிட்டி குப்பை மேட்டில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

ஐரோப்பா

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள கடையில் தீவிபத்து!

  • October 17, 2025
  • 0 Comments

லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்று மாலை தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஃபாரஸ்ட் ஹில்லில் (Forest Hill)  உள்ள பெர்ரி வேலில் (Perry Vale) தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 15 தீயணைப்பு வாகனங்களில் வருகை தந்த 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்டிடத்தின் தரைத்தளத்தில்  கடை உள்ளது, அதன் மேல் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று […]

உலகம்

இந்தோனேசியாவில் (Indonesia) கப்பல் கட்டும் தளத்தில் விபத்து – பலர் உயிரிழப்பு!

  • October 15, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் (Indonesia)  பாட்டம் (Batam) தீவில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் இன்று வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டான்ஜுன்குன்காங் (Tanjunguncang) துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில்  பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தபோது எரிபொருள் டேங்கரில் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக மாகாண காவல்துறைத் தலைவர் அசெப் சஃப்ருதீன் (Asep Safrudin) தெரிவித்துள்ளார். […]