லண்டன் – பல்பொருள் அங்காடியில் தீவிபத்து!
லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இன்று பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பெரிய அளவிலான அவசரகால மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுமார் 100 தீயணைப்பு வீரர்களும் 15 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
மின்சார கோளாறினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தீவிபத்தினால் எ்வ்வித காயங்களும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் புகை மூட்டம் காரணமாக மக்கள் ஜன்னல்களை மூடி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




