ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற இரு எண்ணெய் கப்பல்கள் தீப்பற்றி எரிவதாக தகவல்
ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடி விபத்துகளுக்குப் பிறகு தீப்பிடித்து எரிவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக கடல்சார் கண்காணிப்பை மேற்கொள்ளும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) அமைப்பிடமிருந்து எந்த தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
இருப்பினும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு காரணமாக, இந்த நீர்வழிப்பாதை “மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது என ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.
தெற்குப் பகுதியில் “பரவலாக கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதாக” புரட்சிகர காவல் படை சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது.
ஈரான் – அமெரிக்காவிற்கு இடையே முன்பு எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ள நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.




