இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் ‘ஆபிரகாம் உடன்படிக்கையில் (Abraham Accords) இணையுமாறு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இஸ்ரேலுடனான உறவை சீராக்கும் இத்தகைய ஒப்பந்தங்கள் பாகிஸ்தானின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிரானது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் Khawaja Asif திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ” எங்களுடைய அடிப்படை கொள்கைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் முரணாக அமையும் எந்தவொரு உடன்படிக்கையிலும் பாகிஸ்தான் இணையக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானது; […]
அடுத்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரட்டியடிக்கப்படும் என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார். நாமல் ராஜபக்சவே நாட்டை ஆள்வதற்கு பொருத்தமான தலைவர் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தேரர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ஆட்சியாளர்கள் சரிவர செயல்படாவிட்டால் அவர்களை விரட்டுவது தேரர்களின் கடமையாகும். அந்தவகையில் இந்த அரசாங்கம் அடுத்த தேர்தலின்போது நிச்சயம் விரட்டியடிக்கப்படும். மக்களுடன் இணைந்து இதற்குரிய சமர் முன்னெடுக்கப்படும். நாமல் […]
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, பாதுகாப்பு காரணங்களால் ஈரான் அணி அந்நாட்டில் தங்குவதற்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இதன் விளைவாக, ஈரான் வீரர்கள் மெக்சிகோவில் தங்கி அங்கிருந்து போட்டிகளுக்காக அமெரிக்காவிற்கு பயணம் செய்வார்கள் என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் அறிவித்துள்ளார். ஈரான் அணி தனது Group G பிரிவின் மூன்று போட்டிகளையும் அமெரிக்காவிலேயே விளையாட வேண்டியுள்ளது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரான் அணி […]
“மக்கள் ஆணைமூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமொன்று நாட்டில் இருக்கும்போது, அதற்கு மேலான சக்தியொன்றே தீர்மானம் எடுக்கின்றது என நாம் சுட்டிக்காட்டிவந்தோம். இது உண்மை என்பதை ரில்வின் சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படமாட்டாது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா யாழில் வைத்து வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு, “ உரிய […]
ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்த நிலையில், லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. லெபனானின் கிழக்குப்பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிய படையினர், ராணுவ ஆயுதங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் கட்டடங்களைக் குறிவைத்து 22 ட்ரோன் ற்றும் ஏவுகணைத் […]
தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானிய படகுகளைக் குறிவைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானியப் படைகளால் எங்கள் படைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக, ‘தற்காப்பு’ நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது. தெற்குத் துறைமுக […]
ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் முக்கிய நகர்வாக, மேற்கு ஆஸ்திரேலியாவில் (Western Australia ) அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பதற்கான பிரமாண்ட உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு காண்பதற்கும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்களை எதிர்கொள்வதற்கும் இந்த ஆயுத உற்பத்தி மையம் முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தனது இராணுவத் தேவைகளுக்காகவும் தற்காப்புப் படைகளுக்காகவும் (ADF) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளைச் சார்ந்திருப்பதை […]
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆயுள் காலம் குறைவடைய ஆரம்பித்துள்ளது என்பதையே தற்போது நடக்கும் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே விமல்வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். “மே மாதம் கைதட்டுவதற்கு தயாராக இருக்குமாறு மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி […]
IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இன்று Play – off சுற்று ஆரம்பமாகின்றது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் , குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் இன்று மோதுகின்றன. இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் (Eliminator) சுற்றில் […]