இலங்கை செய்தி

செம்மணியில் கைக்குழந்தையின் என்புத் தொகுதி மீட்பு!

  • May 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளமை பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 10ஆம் நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கைக்குழந்தை ஒன்றின் என்புத் தொகுதி உட்பட நான்கு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. முன்னதாக அடையாளம் காணப்பட்டவற்றிலிருந்து, ஒரு சிறு குழந்தையின் என்புத் தொகுதி உட்பட இரண்டு மனித என்புத் தொகுதிகள் நேற்று […]

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உணர்வோடு அணுகவேண்டும்!

  • May 7, 2026
  • 0 Comments

“வட மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும்.” இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், […]

செய்தி

தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரிக்கை!

  • May 7, 2026
  • 0 Comments

தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவுத் துறை , பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியே உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க குறைந்தது 118 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் […]

இலங்கை செய்தி

“போதைப்பொருள் ஒழிப்பு” – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!

  • May 7, 2026
  • 0 Comments

போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகளை விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபை இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் மீண்டும் சமூகத்திற்குள் செல்வதைத் தடுத்து, அவற்றை சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், குற்றவாளிகளுக்குத் […]

இலங்கை செய்தி

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!

  • May 7, 2026
  • 0 Comments

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) பதிவாகியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவௌ 10ம் கட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை, வியட்நாமுக்கிடையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 7, 2026
  • 0 Comments

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), இன்று (07) இரவு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார். இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த அழைப்பிற்கு இணங்க, இந்த வருகை இடம்பெறுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் […]

உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகளுக்கு முடிவு கட்டியது இஸ்ரேல்!

  • May 7, 2026
  • 0 Comments

லெபனான், பெய்ரூட் நகரின் தெற்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்மட்டப் பிரிவான ரத்வான் Radwan பிரிவின் தலைவர் அகமது பலுத் உள்ளிட்ட மூன்று முக்கியத் தலைவர்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. வான்வழிப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளும் இஸ்ரேலால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

பிரான்ஸ் விமான நிறுவனங்களுக்கு சலுகை!

  • May 7, 2026
  • 0 Comments

விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் பிரான்ஸ் அரசாங்கம் தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கத் திட்டமிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஐரோப்பாவின் விமானப் போக்குவரத்து சேவையைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனைச் சமாளிக்க வரிச் சலுகைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு கட்டணங்களைச் செலுத்துவதில் கால அவகாசம் போன்ற சலுகைகளை வழங்க பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் முன்வந்துள்ளார். ஐரோப்பா தனது எரிபொருள் தேவைக்கு அதிகளவில் மத்திய கிழக்கையே நம்பியிருப்பதால், இந்தச் சூழல் ஒரு […]

ஆஸ்திரேலியா செய்தி

ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய பெண்கள்மீது பயங்கரவாத விசாரணை!

  • May 7, 2026
  • 0 Comments

சிரியாவில் உள்ள அகதி முகாம்களில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஐ.எஸ். (ISIS) அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் இன்று ஆஸ்திரேலியாவை வந்தடைந்தனர். ஒரு குழுவினர் ஆஸ்திரேலிய நேரப்படி இன்று மாலை 5:30 மணியளவில் மெல்போர்ன் விமான நிலையத்திலும், மற்றொரு பெண்ணும் குழந்தையும் அடுத்த 15 நிமிடங்களில் சிட்னியிலும் தரையிறங்கினர். இவர்கள் அரசியல் வட்டாரங்களில் ‘ஐ.எஸ். மணப்பெண்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். 2019-இல் ஐ.எஸ். அமைப்பின் வீழ்ச்சிக்குப் பிறகு, சிரியாவில் உள்ள அல்-ரோஜ் […]

அரசியல் இலங்கை செய்தி

தோட்டத் தொழிலாளர்கள்மீது தொடர் தாக்குதல்: அதிர்ந்தது நாடாளுமன்றம்!

  • May 7, 2026
  • 0 Comments

  ” மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தோட்ட அதிகாரியா, தொழிலாளியா என்பது முக்கியமல்ல. சட்டமென்பது அனைவருக்கும் சமம்.” இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் இன்று (07) திட்டவட்டமாக அறிவித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார். மஸ்கெலியா, மொக்கா தோட்டத்தில் தோட்ட தொழிலாளி […]

error: Content is protected !!