உலகம்

தென்கொரியாவில் எரிபொருள் உற்பத்தி ஆலையில் விபத்து – ஐவர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் ரொக்கெட் எரிபொருள் உற்பத்தி ஆலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். டேஜியோன் நகரில் உள்ள ஹன்வா ஏரோஸ்பேஸ் (Hanwha Aerospace) நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் […]

இலங்கை

தானசாலையில் வரிசையில் இருந்த மக்கள் மீது மோதிய கார்!! 06 பேர் உயிரிழப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

மீகொடவில்  வெசாக்கை முன்னிட்டு தானம் பெற காத்திருந்த மக்கள் கூட்டத்தினர் மீது கார் ஒன்று மோதியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவெலவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாடகைக் கார் ஒன்று, மீகோடா சந்தியில்  தானசாலையில் வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது  வரிசையில் இருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 […]

உலகம்

பங்களாதேஷில் கோர விபத்து – 15 பேர் ஸ்தலத்தில் பலி!

  • May 25, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் இன்று அதிகாலை லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 83 கி.மீ தொலைவில் உள்ள டாங்கைல் மாவட்டத்தின் சோரடோயில் (Soratoil) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பா செய்தி

லண்டனில் கட்டளையை மீறிச்சென்ற கார் விபத்து – 09 பேர் காயம்

  • May 17, 2026
  • 0 Comments

லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச்சென்ற காரொன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தை நிறுத்த பொலிஸார் முயன்றபோது, அந்த கார் நிற்காமல் தப்பிச் சென்றதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த கார் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு கார்களிலும் இருந்தவர்கள் மற்றும் ஒரு மோட்டார் ஸ்கூட்டர் ஓட்டுநர் உட்பட மொத்தம் 10 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக […]

இலங்கை

ரயில் தடம் புரண்டு விபத்து – 12 பேர் காயம்!

  • May 16, 2026
  • 0 Comments

வனவசல மற்றும் ஹுனுபிட்டிய இடையேயான பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலே இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர். அதேநேரம் படுகாயமடைந்த பயணி ஒருவர்  மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். […]

உலகம்

மெக்சிகோவில் பாரிய பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 41 பேர் இருந்தனர். அவர்களில் ஆறு பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,  மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. விபத்தில் சிக்கிய பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து, நயாரிட்டில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்ததாக  முதற்கட்ட விசாரணையில் […]

உலகம்

இந்தோனேசியாவில் ரயில் விபத்து; 14 பேர் பலி

  • April 28, 2026
  • 0 Comments

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் படுகாயமடைந்த 80 இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கும் பணியும் நடைபெற்றுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

தம்புள்ள–மாத்தளை பிரதான சாலையில் கோர விபத்து!

  • April 26, 2026
  • 0 Comments

தம்புள்ள–மாத்தளை பிரதான சாலையில், இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (26) காலை சுமார் 9:20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து ஒன்று அரசுக்கு சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது. இதில  11 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நாலந்தா பிராந்திய மருத்துவமனை மற்றும் மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தனியார் பேருந்தின் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார், அதேசமயம் இலங்கை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தீயில் கருகி இரு குழந்தைகள் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton) உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைப் பிரிவினர், அந்த வீட்டிலிருந்து 02 குழந்தைகளை மீட்டனர்.  இருப்பினும் குழந்தைகள் இருவரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளும் பெண் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் குறித்த  வீட்டைச் சுற்றி வளைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை முக்கிய செய்திகள்

NPP நாடாளுமன்ற உறுப்பினர் சென்ற கார் விபத்து

  • March 30, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், நேற்று இரவு (29) சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.