ஐரோப்பா

சுவீடனில் தஞ்சம் கோருவோருக்கு முக்கிய செய்தி!

  • June 1, 2026
  • 0 Comments

புலம்பெயர்ந்தோர் தஞ்சம் கோருவதற்கான சட்டவிதிகளில் சில தளர்வுகளை சுவீடன் அரசாங்கம் இன்று  அறிவித்துள்ளது. முன்னதாக  புலம்பெயர் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் பதின்ம வயதினர் நாடு கடத்தப்பட வாய்ப்பிருந்தது. இதனை சட்டவல்லுநர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதாவது   தஞ்சம் கோரியபோது தங்கள் பெற்றோருடன் ஸ்வீடனுக்கு வந்த சிறார்கள், 18 வயதை எட்டும்போது நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலமை காணப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் நாடு கடத்தப்படும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு கடத்தப்படும் […]

செய்தி

போரால் ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் – ஸ்வீடன் எச்சரிக்கை

  • April 28, 2026
  • 0 Comments

போர்நிலை காரணமாக ஜெட் எரிபொருள் (Jet Fuel) பற்றாக்குறை உருவாகக்கூடும் என ஸ்வீடன் (Sweden) அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்வீடனின் எரிசக்தி அமைச்சர் எப்பா புஷ் (Ebba Busch) இதனைத் தெரிவித்துள்ளார். மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டால், ஸ்வீடனில் விமான எரிபொருளுக்குப் பங்கீட்டு முறை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், எதிர்கால சந்தை நிலைமையைப் பொறுத்தே தீர்மானம் மேற்கொள்ள முடியும் என எரிசக்தி முகமையின் பொது இயக்குநர் கரோலின் அசெரப் (Caroline Asserup) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

போர் சூழல் – உணவுக் கிடங்குகளை நிரப்பும் ஸ்வீடன் (Sweden)!

  • October 16, 2025
  • 0 Comments

ஸ்வீடன் (Sweden) தனது பனிப்போர் கால உணவுக் கிடங்குகளை மீளவும் நிரப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுடனான போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு சுவீடன் நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 2026 வரவு செலவு திட்டத்தின் கீழ், தேசிய தானிய இருப்புக்களை உருவாக்க […]

ஐரோப்பா

ஸ்வீடனில் துப்பாக்கிச்சூடு – 06 பேர் படுகாயம் !

  • October 4, 2025
  • 0 Comments

ஸ்வீடனின்  Gävle என்ற நகரில்  இன்று  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 06 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவகங்கள், மதுபான கூடங்கள் நிறைந்த பரபரப்பான சாலையில் இந்த  துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட 06 இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளதுடன்,  அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல்தாரியான 14 வயது சிறுவன்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், […]