ஐரோப்பா செய்தி

ஸ்டாமர் பதவி விலக வேண்டும் – தொழிற்கட்சி எம்.பி அழைப்பு!

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று சர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என தொழிலாளர் கட்சி எம்.பி. ஜொனாதன் பிராஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹார்ட்லிபூலில் (Hartlepool) தொழிலாளர் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து பிராஷின் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் ஹார்ட்லிபூலுக்கும் தொழிலாளர் கட்சிக்கும் ‘மோசமானவை’ மற்றும் ‘பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை’ என்று அவர் விவரித்தார்.

ஸ்டார்மர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை நிர்ணயித்து, பரந்த அளவிலான தலைமைத் தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் அந்த எம்.பி. வலியுறுத்தினார்.

தொழிலாளர் கட்சி ‘மிகவும் கோழைத்தனமாக’ இருப்பதாக குறிப்பிட்ட அவர் , நாட்டை மாற்றுவதற்கு புதிய, துணிச்சலான தலைமை அவசியம் என்றும் கூறினார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!