விண்வெளி ஏவுகணை பாதுகாப்பு திட்டம் – 3.2 பில்லியன் நிதி ஒதக்கீடு
விண்வெளி அடிப்படையிலான ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திற்கான முதல் சோதனைகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்த பென்டகன் இலக்கு வைத்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ செயலாக்க திட்டங்கள் வரும் 2027 ஆம் ஆண்டு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் கோல்டன் டோம் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த விண்வெளி அடிப்படையிலான ஏவுகணை இடைமறிப்பான் திட்டம் முக்கிய மைல்கற்களாக பார்க்கப்படுகிறது.
ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்காக, ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோள்களின் முன்மாதிரிகளை உருவாக்க 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தங்கள் அமெரிக்காவை தேடி வரும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பனிப்போர் காலத்தில் டொனால்ட் ரீகனின் வியூகப் பாதுகாப்பு முயற்சிக்குப் பிறகு, விண்வெளி அடிப்படையிலான ஏவுகணைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மிகவும் லட்சியமான முயற்சிகளில் ஒன்றாக இந்தத் திட்டம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, ரஷ்யா மற்றும் சீனா போன்ற அணு ஆயுத நாடுகளிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இந்தத் தொழில்நுட்பம் முன்னெப்போதையும் விட அதிகமாகத் தேவைப்படுகிறது என்று பென்டகன் கூறுகிறது.




