பொழுதுபோக்கு

விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கியில் சமந்தா என்ன செய்றார் தெரியுமா?

விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா துருக்கி சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் எமோஷனலான கேப்ஷனுடன் பகிர்ந்திருக்கிறார்.

சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

திருமண வாழ்க்கை முடிந்துவிட்டதால் அது கொடுக்கும் மன அழுத்தம் காரணமாக இனி சமந்தாவால் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாது என பலரும் ஆரூடம் கூறினர். ஆனால் அவர்களது ஆரூடத்தை அடித்து நொறுக்கும்படி சமந்தா கோலிவுட், ஹாலிவுட் என றெக்கை கட்டி பறந்தார். நடிப்பு மட்டுமின்றி புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமாவுக்கு நடனமும் ஆடினார். இதனால் அவரது கரியர் கிராஃப் உச்சம் சென்றது.

அவரது கரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.

மையோசிடிஸ் நோயிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா மீண்டும் படங்களில் நடித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் அண்மையில் ரிலீஸாகி படுதோல்வியை சந்தித்தது. பத்து கோடி ரூபாய்கூட அந்தப் படம் வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக சமந்தாவின் கரியரில் சாகுந்தலம் பெரும் தோல்வி படமாக சேர்ந்திருக்கிறது.

அதே சமயம் கேன்ஸ் திரைப்பட விழாவில் அப்படத்துக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இருப்பினும் வசூல் ரீதியாக அடி வாங்கியதால் ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் அவர்.

அதேபோல் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்திருக்கும் குஷி படம் விரைவில் வெளியாகிறது. மேலும் அந்தப் படத்தின் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குஷி படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் துருக்கிக்கு சென்றிருக்கின்றனர். அங்கு ஒரு ரெஸ்டாரண்ட்டில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும், “நல்லது கெட்டது, ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்வி என அனைத்தையும் இந்த வருடத்தில் பார்த்துவிட்டேன். ஆனால் வெகு சிலர்தான் உண்மையான நண்பர்களாக உடன் நிற்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content