இலங்கை

தேவையான ஒத்துழைப்பு வழங்குவோம் – மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு

இலங்கை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அனுராதபுரம் ஸ்ரீ மகா விகாரை மற்றும் ருவன்வெளிசாய ஆகிய விகாரைகளில் மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில் முன்னேற்றத்தன்மை காணப்படுகிறது. அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு பதவிகள் இல்லாத காரணத்தால் ஆளும் தரப்பின் ஒருதரப்பினர் அதிருப்தியடைந்துள்ளார்கள் ? மஹிந்தவிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவ்வாறு இருப்பார்களாயின் அதுவும் நன்மைக்கே என குறிப்பி்டுள்ளார்.

எமது ஒத்துழைப்புடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்,அவ்வளவு தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊடகங்களுக்க பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலி மற்றும் ஒளிப்பரப்பு அதிகார சபை சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? என மஹிந்தவிடம் கேட்கப்பட்ட போது அனுமதிபத்திரம் இரத்து செய்யப்படாத வகையில் ஊடகங்கள் பாதுகாக்காக செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை எத்தன்மையில் காணப்படுகிறது என வினவிய போது, நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.பொருளாதாரத்தில் முன்னேற்றத்தன்மை காணப்படுகிறது.அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content