ஐரோப்பா

இலக்கை மாற்றிய ரஷ்யா – பற்றி எரிந்த உக்ரைனின் பெட்ரோல் நிலையம்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பெட்ரோல் நிலையத்தை ரஷ்ய படைகள் முதன் முறையாக தாக்கியுள்ளனர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ  Vitali Klitschko தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீ விபத்தால் வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன், அருகில் இருந்து கட்டிடங்களுக்கும் தீ பரவியதாக அவசரகால சேவைத் துறை தெரிவித்தது.

“இத்தகைய தாக்குதல்களில் எந்த இராணுவ நோக்கமும் இல்லை. இது பொதுமக்களை அச்சுறுத்தும் ஒரு பயங்கரவாதச் செயல்,” என்று பெட்ரோல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி போஹ்தான் குகுரா Bohdan Kukura  விமர்சித்துள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக, கீவ் நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகளைக் குறிவைத்து, ரஷ்யா ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறான தாக்குதல் உக்ரைனின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்