பொழுதுபோக்கு

தலைவர் 170இல் அதிரடி மாற்றம்… வில்லன் விக்ரம் இல்லையா? வெறித்தனமான அப்டேட்….

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் திகதி வெளியாகிறது. இதையடுத்து தலைவர் 170 படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அந்த வகையில், தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார். இந்தப் படத்தில் வில்லனாக விக்ரம் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜெய்பீம் இயக்குநர் தசெ ஞானவேல் – சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. லைகா தயாரிக்கும் தலைவர் 170 படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாம். இதனால் தற்போது ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாகவுள்ளது.

அதேபோல், ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள், டெக்னீஷியன்கள் யார் யார் என்பதையும் தசெ ஞானவேல் முடிவு செய்து வருகிறாராம். தலைவர் 170 படத்தில் ரஜினி ரிட்டையர்டு போலீஸ் ஆபிஸராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதற்காக விக்ரம்க்கு மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க லைகா ரெடியாகவுள்ளது.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வரும் விக்ரம், சில தினங்களுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறு விபத்தால், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு ரெஸ்ட் எடுத்து வருகிறார்.

இதனால் தலைவர் 170 படத்தில் விக்ரம் நடிக்க முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக இன்னொரு ஹீரோவை வில்லன் கேரக்டருக்கு புக் செய்ய படக்குழு ரெடியாகிவிட்டது. அது ஆக்‌ஷன் கிங் அர்ஜுனாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

நேர்மையான போலீஸ் ஆபிஸராக மட்டுமே நடித்து வந்த அர்ஜுன், அஜித்தின் மங்காத்தா படத்தில் முதன்முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அதனால், தலைவர் 170 படத்தில் அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்கலாம் என தசெ ஞானவேல் & டீம் ஆலோசித்து வருகிறது.

விக்ரமின் பதிலை பொறுத்தே அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்த தசெ ஞானவேல் முடிவு செய்துள்ளாராம்.

முன்னதாக தலைவர் 170 படத்திற்காக விக்ரமுக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க லைகா ரெடியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content