விளையாட்டு

கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த கோலி

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் 6 சதங்கள் அடித்த வீரர் கிறிஸ் கெயில் சாதனையை முந்தி கோலி தனது 7-வது ஐபிஎல் சதத்தை அடித்தார். நேற்று குஜராத் அணிக்கு எதிராக விராட்கோலி 60 பந்துகளில் அதிரடியாக விளையாடி சதத்தை எட்டினார். இது அவருக்கு இந்த சீசனில் இரண்டாவது சதமும் கூட.

இதன் மூலம் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்த முதல் பெங்களூர் வீரரும் இவர் தான். மேலும், கடைசியாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் எடுத்தார்.

இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிகம் சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு 6 சதங்கள் எடுத்து கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், தற்போது 7 சதங்கள் அடித்து விராட் கோலி இந்த சாதனையை முறியடைத்துள்ளார்.

மேலும், நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content