NHS அறக்கட்டளையின் அலட்சியம் – 315இற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு பிழையான சிகிச்சை
பிரித்தானியாவின் NHS அறக்கட்டளைகள் பிழையான சிகிச்சைகளை வழங்கியுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
20 பெண்களுக்குத் தேவையற்ற மார்பக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், குறிப்பிடத்தக்க சிகிச்சைக் குறைபாடுகளால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
2023 மற்றும் 2025-க்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட 514 வழக்குகளை ஆய்வு செய்ததில், 315 நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில், 77 பேர் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் மேலும் சில வழக்குகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நோயாளி டெனிஸ் ஹோவர்த் Denise Howarth , தனது மார்பக அறுவை சிகிச்சை தேவையற்றது என்று கூறப்பட்டதால் ஏற்பட்ட ஆழ்ந்த உடல் மற்றும் உளவியல் தாக்கத்தை விவரித்தார்.
தனது அடையாளத்தையே பறித்துவிட்டதாகவும், வாழ்க்கையையே மாற்றியமைத்த அந்தத் தவறுக்கு ஒரு மன்னிப்பு போதுமானதல்ல என்றும் கூறியுள்ளார்.




