தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் காலமானார்
திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் தங்கராசா ராசமணி இன்று புதன்கிழமை (29) அவரது வீட்டில் காலமானார்.
இலங்கை தமிழரசு கட்சியில் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அவர் பிரதேச சபை உறுப்பினராக கடமை ஆற்றி வந்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து எந்த ஒரு கட்சி பாகுபாடு இன்றியும் சமூக நல்லிணக்கிற்கு மிகவும் அளப்பரிய சேவையாற்றியவர்.
மொரவெவ சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதியாகவும் கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாய சங்கம் மற்றும் கோயில் சங்கங்களில் தலைவராகவும் கடமை ஆற்றி வந்துள்ளார்.
இவரது சடலம் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நொச்சிக்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது





