சட்டவிரோத குடியேறிகளின் வருகை – பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்த அழைப்பு
செவுட்டாவிற்குகள் சட்டவிரோதமாக 60000 குடியேறிகள் பிரவேசித்ததை தொடர்ந்து அவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கன்சர்வேடிவ் மற்றும் ரிஃபார்ம் யுகே கட்சிகள் அமைச்சர்களை நேற்று வலியுறுத்தின.
நிழல் வெளியுறவுச் செயலர் பிரிதி படேல் (Priti Patel ) , குடியேறிகளில் சிலர் ‘தவிர்க்க முடியாமல் இங்கிலாந்திற்குச் செல்ல முயற்சிப்பார்கள்’ எனத் தெரிவித்தார்.
அதேபோல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அவர்களில் பலர் ஆபத்தானவர்கள், கலேஸ் மற்றும் நம் நாட்டை நோக்கி வருவார்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. இது நமது நாகரீகத்துக்கான போர் என சீர்திருத்தத் தலைவர் நைகல் ஃபாரேஜ் (Nigel Farage) எச்சரித்துள்ளார்.
இருப்பினும் பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லை என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.




