20 வருடத்தில் முதல் முறையாக iPhone வடிவமைப்பில் மாற்றம்
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த படைப்புகளை வெளியிட தயாராகி வருகிறது.
புதிய தலைமை நிர்வாகி ஜான் டெர்னஸின் John Ternus பதவிக்காலத்தைத் தொடங்கும் விதமாக, வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி புதிய படைப்பை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிளின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என்றும், இது அதன் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் நுழையும் விதமாக, தனது முதல் மடிக்கக்கூடிய ஐபோனை iPhone அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை நெருங்கும் வேளையில், இந்த புதிய மடிக்கக்கூடிய வடிவமைப்பு, அந்தத் தயாரிப்பின் தோற்றத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒற்றை மாற்றமாகும்.
இந்த சாதனம் ஒரு சாதாரண பாஸ்போர்ட்டின் அளவில் இருக்கும், மேலும் அதைத் திறக்கும்போது ஒரு சிறிய ஐபேடின் அளவிலான திரையைக் காண்பிக்கும் என விவரிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது தற்போதைய உயர் ரக ஸ்மார்ட்போன்களின் அடுத்த தலைமுறை மாடல்களான ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.




