UKவில் தொலைபேசி திருட்டுகளை தவிர்க்க மின்சார மிதிவண்டிகள் அறிமுகம்
பிரித்தானியாவில் தெருக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்யவும், தொலைபேசி திருட்டுக்களை கையாளவும், பெருநகர கவால்துறை மின்சார மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட் காவல்துறை 20 புதிய மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறது.
இவை மணிக்கு 80 கி.மீ. வரை வேகத்தில் செல்லக்கூடியவை மற்றும் சந்தேக நபர்களைச் சாலைகளுக்கு வெளியேயும், படிக்கட்டுகளிலும் கூட பின்தொடரக்கூடியவை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த மிதிவண்டிகள் குறிப்பாக கைபேசித் திருட்டுகளைக் கையாள உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மே மாதம் வரையிலான 12 மாதங்களில் குற்றங்கள் சுமார் 68,000-லிருந்து 54,000-ஆகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.




