செய்தி விளையாட்டு

இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பு விளையாட்டுக்கான தடை நீடிப்பு!

பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டு தொடருக்கான தடையை இந்திய விளையாட்டுத்துறை அமைச்சு நீடித்துள்ளது.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சால் நேற்று விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் , இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ), இந்திய விளையாட்டு ஆணையம் ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியா, பாகிஸ்தான் மோதும் இரு நாடுகளிடையிலான கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட தொடர்களுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் நடைபெறும் இருதரப்பு போட்டியில் இந்தியா பங்கேற்காது.’ எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் இந்தியாவில் நடைபெறும் இருதரப்பு போட்டியில் பாகிஸ்தான் அணிகள் வந்து பங்கேற்பதையும் விளையாட்டு அமைச்சகம் அனுமதிக்காது.

அதேவேளை, சர்வதேச விளையாட்டு அமைப்புகள் இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையோ அல்லது பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளையோ நடத்தும்போது அந்தப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய அணி, தனிப்பட்ட வீரர்கள் பங்கேற்பர்.

வெளிநாடுகளில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது அதில் பாகிஸ்தான் பங்கேற்றால் அந்தப் போட்டியில் இந்திய அணியோ, தனிப்பட்ட வீரர்களோ பங்கேற்கத் தடை இல்லை.

அதேபோல் இந்தியா நடத்தும் சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணியோ, தனிப்பட்ட வீரர்களோ பங்கேற்கத் தடை இல்லை எனவும் மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!