உலகம்

பசிபிக் கடற்பகுதியில் மற்றொரு தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்கா – 05 பேர் பலி!

  • December 19, 2025
  • 0 Comments

கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று  மற்றொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதில் 05 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் ( Pete Hegseth) உத்தரவின் பேரில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்கவும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் ட்ரம்ப் நிர்வாகம் கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய […]

ஐரோப்பா செய்தி

UKவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்!

  • December 19, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் பணியில் இருக்கும் போது 02 அல்லது 03 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் குறித்து அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர். பிரித்தானியா ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளைச் சேர்ந்த 1,100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில்  40 சதவீதத்திற்கும் அதிகமானோர் உடல் ரீதியான தாக்குதல்களை எதிர்பார்க்கிறார்கள் என்றும், பாதிக்கும் மேற்பட்டோர் வாய்மொழி துஷ்பிரயோகத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் காலப்பகுதியில்  நான்கு பேரில் மூன்று […]

இலங்கை செய்தி

யாசகம் பெற்றேனும் பிழைப்பேன்: பதவி நீக்கப்பட்ட வைத்தியர் கருத்து!

  • December 19, 2025
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, தனது அலுவலகத்தில் இருந்து இன்று (19) வெளியேறினார். அலுவலகத்தில் இருந்த தனது முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டே அவர் சென்றுள்ளார். வீடு செல்லும் வழியில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு சிரித்தப்படியே பதிலளித்தார் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன. அவரிடம் எழுப்பட்ட கேள்விகளும், வழங்கப்பட்ட பதில்களும் வருமாறு, கேள்வி – இன்று விடைபெறுகின்றீர்களா? பதில் – போகச் சொன்னால், போய்தானே ஆகவேண்டும். […]

உலகம் செய்தி

கிரீன் கார்ட் லொட்டரி (green card lottery) திட்டத்தை இடைநிறுத்திய ட்ரம்ப்!

  • December 19, 2025
  • 0 Comments

கிரீன் கார்ட் லொட்டரி (green card lottery) திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்துள்ளார். பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem), ட்ரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளுக்கு திட்டத்தை இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளதாக  கூறியுள்ளார். இவ்வாறான கொடூரமானவர்கள் நாட்டிற்குள் நுழைவதை அனுமதிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பன்முகத்தன்மை […]

ஐரோப்பா செய்தி

நிதி மறுபகிர்வு – கவுன்சில் வரி உயர்வை எதிர்கொள்ளும் லண்டன் மக்கள்!

  • December 19, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் நிதியை மறுப்பகிர்வு செய்ய முயற்சிக்கும்போது இலட்சக்கணக்கான லண்டன் மக்கள் மிகப்பெரிய கவுன்சில் வரி உயர்வுகளை எதிர்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மிகவும் பின்தங்கிய பகுதிகளுக்கு நிதியை மாற்றிய பின்னர் முன்னணி நகரங்கள் வரி உயர்வை சந்திக்கும் எனத் தெரிவிக்கப்ப்டுள்ளது. நிதி ஆய்வுகள் நிறுவனம் (IFS) சில லண்டன் பெருநகரங்களில் கவுன்சில் வரி 75% வரை அதிகரிப்பை காணும் எனக் குறிப்பிட்டுள்ளது. கென்சிங்டன் (Kensington), செல்சியா (Chelsea), வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster), வாண்ட்ஸ்வொர்த் (Wandsworth), ஹேமர்ஸ்மித்  (Hammersmith) […]

இலங்கை செய்தி

பேரிடரால் சேதமடைந்த மத, தொல்பொருள் தளங்களை மீளமைக்க நடவடிக்கை!

  • December 19, 2025
  • 0 Comments

அனர்த்தத்தினால் சேதமடைந்த மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களை விரைவாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மத, கலாசார மற்றும் தொல்பொருள் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு பணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பௌத்த பீடங்களின் மகா சங்கத்தினர் உட்பட சர்வமதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். ” […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும்: நாடாளுமன்றில் வலியுறுத்து

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தாழமுக்கம் தாக்கம் ஏற்படுவதால் சீரற்ற காலநிலை நிலவக்கூடும், இதற்கு தயாராக வேண்டும் என வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. வெள்ள அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசாங்கத்தால் […]

அரசியல் இலங்கை செய்தி

வைத்தியர் பெல்லன பணி நீக்கம்: சபையில் சஜித் கொந்தளிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டது அநீதியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (19) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் கூறியவை வருமாறு, “புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் அவசியம். ஏனெனில் மருந்து மாபியா உட்பட சுகாதார சேவையில் நிலவும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் […]

உலகம் செய்தி

போண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இஸ்லாமிய அரசு வெளியிட்ட அறிக்கை!

  • December 19, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு வரவேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய பயங்கரவாத குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், தாக்குதல்தாரிகளை பாராட்டியுள்ளது. தாக்குதல்தாரிகளை சிங்கங்கள் என வர்ணித்துள்ளதுடன், ‘பெருமையின் ஆதாரம்’ என்றும் புகழ்ந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை. இந்த ஜோடி அதன் போதனைகளால் ‘ஈர்க்கப்பட்டிருக்கலாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. போண்டி கடற்கரையில் ஹனுக்காவின் முதல் நாளைக் கொண்டாடிய யூத மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்!

  • December 19, 2025
  • 0 Comments

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சால் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொறுப்பான பதவியில் இருந்த அவர் முன் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட அவரின் அறிவிப்புகள், பொதுமக்களிடையே சர்ச்சையையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள […]