உலகம்

பசிபிக் கடற்பகுதியில் மற்றொரு தாக்குதலை முன்னெடுத்த அமெரிக்கா – 05 பேர் பலி!

கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று  மற்றொரு தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இதில் 05 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் ( Pete Hegseth) உத்தரவின் பேரில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்கவும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையிலும் ட்ரம்ப் நிர்வாகம் கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 100 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்