ஐரோப்பா செய்தி

UKவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!!

  • December 21, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டில்  சராசரியாக £436 பவுண்ட்ஸை வட்டியாக பெறுவார்கள் என நேஷன்வைட் பில்டிங் சொசைட்டி (Nationwide Building Society) தெரிவித்துள்ளது. கட்டிட சங்கம் (biggest building society) நடத்திய சமீபத்திய ஆய்வில், நாட்டில் உள்ள பெரியவர்கள் வரும் ஆண்டில் சராசரியாக £7,535 பவுண்ட்ஸ் சேமிப்பார்கள் எனக் கண்டறிந்துள்ள நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஆய்வின் ஒரு பகுதியாக மக்களின் சேமிப்பு விருப்பங்களை அளவிடுவதற்காக இங்கிலாந்து முழுவதும் 2,000 க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து […]

ஐரோப்பா செய்தி

அடுத்த கிறிஸ்துமஸுக்கும் ஸ்டார்மரே பிரதமர் – ட்ரெவர் பிலிப்ஸ்

  • December 21, 2025
  • 0 Comments

அடுத்த கிறிஸ்துமஸுக்கும் கெய் ஸ்டார்மரே (Keir Starmer) பிரதமராக இருப்பார் என சமூக மற்றம் சமத்துவ நிபுணர் ட்ரெவர் பிலிப்ஸ் (Trevor Phillips) தெரிவித்துள்ளார். அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்த பல கடினமான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் பிலிப்ஸ் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தற்போது மக்கள் மீட்சியைக் காணத் தொடங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் கடந்த ஆண்டு வாக்களித்த மாற்றத்தின் நன்மைகளை புதிய ஆண்டில், உணர்வார்கள் என்றும் ட்ரெவர் பிலிப்ஸ் (Trevor Phillips) தெரிவித்துள்ளார். அவர் தொழிற் கட்சியின் அன்னா […]

இந்தியா செய்தி

டெல்லியில் கடும் பனிமூட்டம் – விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு

  • December 21, 2025
  • 0 Comments

இந்தியாவின் டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் 110 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை தாமதமாகியுள்ளன. கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் நிலவி வரும் நிலையில் வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும் பனிமூட்டம் காட்சி தெளிவின்மையை உருவாக்குவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆணையத்தின் அறிவிப்பில் […]

இலங்கை செய்தி

பேராதனை பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பு

  • December 21, 2025
  • 0 Comments

டிட்வா சூறாவளி காரணமாக தடைபட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் க நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, கால்நடை வைத்திய விஞ்ஞான பீடம், விவசாய பீடம் மற்றும் பல் மருத்துவ விஞ்ஞான பீடம் என்பன மீண்டும் திறக்கப்படும் என பல்லைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2026 ஜனவரி மாதம் 05 ஆம் திகதி விஞ்ஞானம் மற்றும் கலை பீடங்களை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் முகாமைத்துவ பீடத்தை மீண்டும் திறப்பது குறித்து […]

இலங்கை செய்தி

ஐந்து மீனவர்களுடன் மாயமான பல நாள் மீன்பிடிபடகு

  • December 21, 2025
  • 0 Comments

மாத்தறை, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பல நாள் மீன்பிடி படகு ஒன்று காணாமற் போயுள்ளது. ‘இதுரங்கி 1’ எனும் பலநாள் மீன்பிடிப் படகொன்றே இவ்வாறு காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த படகில் ஐந்து மீனவர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகு கடந்த கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் காணாமற் போயுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 6 ஆம் திகதி இறுதியாக அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அன்று முதல் இதுவரை […]

உலகம்

வங்கதேசத்தில் தீக்கிரையாக்கப்பட்ட அரசியல் தலைவரின் வீடு – சிறுமி பலி!

  • December 21, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவர் பெலால் ஹொசைனின் (Belal Hossain) வீட்டை,  ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குடியிருப்பாளர்கள் இரவு உணவிற்குப் பின்  படுக்கைக்குச் சென்ற பிறகு, வீட்டின் கதவுகள் வெளியில்  பூட்டப்பட்டிருந்ததாகவும், இன்று (21) அதிகாலை 2 மணியளவில் வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெலால் ஹொசைனின் (Belal Hossain) ஏழு வயது மகள் உயிரிழந்துள்ளார். […]

அரசியல் ஐரோப்பா செய்தி

தேர்தல்களை தாமதப்படுத்த முயற்சி – பிரித்தானிய அரசாங்கத்தின் மீது பலரும் குற்றச்சாட்டு

  • December 21, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் 63 உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை தாமதப்படுத்த முயற்சிப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள், விமர்சித்துள்ளனர். ஸ்கை நியூஸ் தகவலின்படி, 05 அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். சில தேர்தல்கள் ஏற்கனவே 2025 இல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத் தலைவர் விஜய் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். மேலும் சில தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திட்டமிடப்பட்ட தேர்தல்கள், மிக அவசரமான சூழ்நிலைகளில் மட்டுமே ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தாமதமான மாற்றங்கள் நிர்வாகிகளுக்கு உதவாது என்றும் கட்சிகள் மற்றும் […]

உலகம்

மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளின் வரிசையில் முன்னிலை வகிக்கும் சவுதி அரேபியா!

  • December 21, 2025
  • 0 Comments

மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளின் வரிசையில் சவுதி அரேபியா தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் முன்னிலை வகிக்கிறது. இந்த ஆண்டு குறைந்தது 347 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 345 ஆக காணப்பட்டிருந்தது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பிரச்சாரக் குழுவான ரிப்ரைவ் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட கைதிகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தானியர்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு பத்திரிகையாளரும், […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை – கைது செய்யப்பட்ட 05 பேரும் விடுதலை!

  • December 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் உள்ள திஸ்ஸ ரஜமஹா விஹாரைக்கு எதிரே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலா 100,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டதற்காக இந்த ஐந்து பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி  தையிட்டியில் பெரும் பதற்றம்: வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது  

ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதியின் இல்லத்தில் கைவரிசையை காட்டிய பணிப்பெண்!

  • December 21, 2025
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பணிபுரிந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஆயிரக்கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் மற்றும் மேஜை சேவைப் பொருட்களைத் திருடியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எலிசி மாளிகையின் தலைமை பணிப்பெண் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்தே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தினால் 15,000 முதல் 40,000 யூரோக்கள் (($17,500-$47,000) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த […]