உலகம் செய்தி

“ குண்டுமழை ஓயட்டும்” : உலகெங்கிலும் அமைதியை வலியுறுத்தும் போப் லியோ!

  • December 26, 2025
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவர நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்த உக்ரைன் மற்றும் ரஷ்யா முன்வர வேண்டும் என்று போப் லியோ வலியுறுத்தியுள்ளார். புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தினரிடம் தனது முதலாவது கிறிஸ்துமஸ் உரையை நிகழ்த்திய அவர் இவ்வாறு கூறியுள்ளார். வத்திக்கான் நகரில் கூடியிருந்த வழிபாட்டாளர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று போப்பாண்டவர் பாரம்பரியமாக ஆற்றும் உர்பி எட் ஓர்பி (Urbi et Orbi)  உரையின் போது, ​​உலகெங்கிலும் உள்ள மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அவர் அழைப்பு விடுத்தார். உக்ரைனைப் பற்றிப் […]

அரசியல் இலங்கை செய்தி

அடக்கி ஆள்வதற்கா அவசரகால சட்டம்?

  • December 26, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. எனினும், எந்தவொரு கட்டத்திலும் அச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக ஒடுக்கமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் எமது ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. ஊடகங்கள் என்னை விமர்சித்தால்கூட அது பற்றி நான் கவலை அடையமாட்டேன். […]

உலகம்

கலிபோர்னியாவின் 06 மாவட்டங்களில் அவசரகால நிலை பிறப்பிப்பு!

  • December 26, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவில் (California) வீசிய சக்திவாய்ந்த புயல் காரணமாக பல பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க தேசிய வானிலை சேவை, “உயிருக்கு ஆபத்தான வளிமண்டல நதி நிலைமைகள்” தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) ஆறு மாவட்டங்களில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். இதற்கிடையே பாதிக்கப்படக்கூடிய வீடுகளுக்கு 130 வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக […]

உலகம்

சலுகையில்லையேல் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் – வெனிசுலாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

  • December 26, 2025
  • 0 Comments

வெனிசுலாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல்களில் உள்ள எண்ணெய்களை தனியான ஒரு இடத்தில் சேமித்து வைப்பதில் கவனம் செலுத்துமாறு வெள்ளை மாளிகை அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) மீது அழுத்தத்தை அதிகரிக்க இராணுவ வழிமுறைகளை விட பொருளாதார வழிகளைப் பயன்படுத்துவதில் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது அதிக ஆர்வம் காட்டுவதை இந்த நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது. இராணுவ அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் ட்ரம்ப் எதிர்பார்க்கும் இலக்கை அடைய பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

“கிறிஸ்தவர்களைக் கொல்பவர்களுக்கு இதுவே பாடம்”: ஐஎஸ் அமைப்பிற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

  • December 26, 2025
  • 0 Comments

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதக் குழுவினர் மீது அமெரிக்க இராணுவம் மிக சக்திவாய்ந்த மற்றும் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் தினமான நேற்று (டிசம்பர் 25) இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்துப் படுகொலை செய்ததற்கான பதிலடியாகவே இந்தத் தாக்குதல் அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையின் […]

Jananayagan Vijay Movie Poster இந்தியா பொழுதுபோக்கு

வெளியானது ‘ஜனநாயகன்’ முதல் விமர்சனம்: பொங்கல் வசூல் வேட்டைக்குத் தயாராகும் விஜய்!

  • December 25, 2025
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான நடிகர் விஜய், தனது முழுநேர அரசியல் பயணத்திற்கு முன்னதாக நடிக்கும் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (The Democrat) வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று வெளியாகிறது. பொதுவாக ஒரு பெரிய படம் வெளியாவதற்கு முன்பே, தணிக்கை குழு (Censor Board) அல்லது திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்வார்கள். அந்த வகையில் ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்த்த சில […]

உலகம் செய்தி

டமாஸ்கஸ்(Damascus) அருகே நடந்த தாக்குதலில் ISIL அமைப்பின் மூத்த தளபதி கொலை

  • December 25, 2025
  • 0 Comments

டமாஸ்கஸ்(Damascus) அருகே ஐ.எஸ்.ஐ.எல்(ISIL) போராளிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் ஹவுரானின்(Hauran) ஆளுநர் என்று விவரிக்கப்படும் ஒரு மூத்த நபரைக் கொன்றதாக சிரிய(Syria) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எல் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான அபு உமர் ஷதாத்(Abu Omar Shadad) என்றும் அழைக்கப்படும் முகமது ஷஹாதே(Mohammed Shahadeh) கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான கண்காணிப்பைத் தொடர்ந்து டமாஸ்கஸ் கிராமப்புறங்களில் செயல்படும் சிறப்புப் பிரிவுகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், தலைநகரின் தென்மேற்கில் […]

உலகம் செய்தி

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு அறுவை சிகிச்சை நிறைவு

  • December 25, 2025
  • 0 Comments

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரேசிலின்(Brazil) முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு(Jair Bolsonaro) அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். 70 வயதான முன்னாள் தலைவருக்கு பிரேசிலியாவில் உள்ள டிஎப் ஸ்டார்(DF Star) மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. “வெற்றிகரமான அறுவை சிகிச்சை சிக்கல்கள் இல்லாமல் முடிந்தது. இப்போது அவர் மயக்க மருந்திலிருந்து எழுந்திருக்கும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று அவரது மனைவி மிஷேல்(Michelle) ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். […]

இந்தியா செய்தி

ஹைதராபாத்தில் காதலனுடன் சேர்ந்து போதைப்பொருள் விற்ற பெண் தொழில்நுட்ப வல்லுநர் கைது

  • December 25, 2025
  • 0 Comments

ஹைதராபாத்தில் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாக 21 வயது பெண் மென்பொருள் பொறியாளர், அவரது காதலன் மற்றும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனையின் போது கஞ்சா(cannabis), எல்எஸ்டி(LSD) மற்றும் எக்ஸ்டசி(ecstasy) மாத்திரைகள் உட்பட கணிசமான அளவு போதைப்பொருட்களும் ரூ.50,000 ரொக்கம் மற்றும் நான்கு தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் தொழில்நுட்ப வல்லுநர் சுஷ்மிதா தேவி என்கிற லில்லி, 25 வயது உம்மிடி இம்மானுவேல், 28 வயது ஜி சாய் குமார் மற்றும் 24 வயது தாரக […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் அடித்துக் கொலை

  • December 25, 2025
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) திபு சந்திர தாஸ்(Tipu Chandra Das) அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் தீக்கிரையாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜ்பாரியின்(Rajbari) பங்ஷா(Bangsha) துணை மாவட்டத்தில் 29 வயதான அம்ரித் மொண்டல்(Amrit Mondal) என்ற சாம்ராட்(Samrat) கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சாம்ராட் பஹினி'(Samrat Bahini) என்ற குற்றவியல் கும்பலின் தலைவராக சாம்ராட் இருந்ததாகவும் மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டதாகவும் உள்ளூர்வாசிகள் வங்கதேச ஊடகமான தி டெய்லி ஸ்டாரிடம்(The […]