இலங்கை செய்தி

முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் உயிரிழப்பு

 

வெலிகம பெலியான பொரஹ புகையிரத கடவையில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (03) பிற்பகல் மாத்தறையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற புகையிரதம் வெலிகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த போது வெலிகம பெலியான பொரஹ புகையிரத கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பிள்ளைகளும் மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர்.

ஏனைய இரண்டு பிள்ளைகள், தாய் மற்றும் மற்றுமொரு உறவினர் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிகம பெலியான மொதரவத்த பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இந்த குழுவாக உள்ளதாகவும், பாடசாலையில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு தாய் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புகையிரத கடவை உட்பட பல புகையிரத கடவைகளில் குறைபாடுகள் உள்ளதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

விபத்து தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content