இலங்கை செய்தி

லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் உட்பட மூவர் கைது

  • January 29, 2026
  • 0 Comments

லங்கா சதோசாவின் முன்னாள் மூத்த மேலாளர் மற்றும் இரண்டு நபர்கள் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர். 2021ம் ஆண்டு வெள்ளைப்பூண்டு தொகுதியை விற்பனை செய்த போது அரசாங்கத்திற்கு 17 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் 54,860 கிலோகிராம் வெள்ளைப்பூண்டை, சதோச நிறுவனம் ஊடாக பொதுமக்களுக்குச் சலுகை விலையில் விற்பனை செய்யாமல், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

உலகம் செய்தி

திருமணத்திற்கு முன் உடலுறவு மற்றும் மது அருந்திய இந்தோனேசிய ஜோடிக்கு 140 பிரம்படி

  • January 29, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின்(Indonesia) ஆச்சே(Aceh) மாகாணத்தில், திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதற்காகவும் மது அருந்தியதற்காகவும் ஷரியா(sharia) காவல்துறையினர் ஒரு ஜோடிக்கு தலா 140 முறை பிரம்படி தண்டனை வழங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில், ஒரு பொது பூங்காவில் பிரம்பு குச்சியால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனையை அனுபவித்த பிறகு அந்தப் பெண் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மொத்தத்தில், இந்த ஜோடிக்கு 140 பிரம்படிகள் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதற்காக 100 மற்றும் மது அருந்தியதற்காக 40 என்று ஷரியா […]

இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை – உறவினர் கைது

  • January 29, 2026
  • 0 Comments

மத்தியப் பிரதேசத்தின்(Madhya Pradesh) பர்வானி(Parwani) மாவட்டத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கால்வாயில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது உறவினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜ்பூர்(Rajpur) காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, கால்வாயில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக அதிகாரி ஜெகதீஷ் தாவர்(Jagdish Thawar) குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் நீரில் மூழ்கி இறந்ததால் மரணம் ஏற்பட்டதாகவும் […]

உலகம் செய்தி

ஈரானின் புரட்சிகர காவல்படையை பயங்கரவாத குழுவாக பட்டியலிட ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

  • January 29, 2026
  • 0 Comments

போராட்டக்காரர்கள் மீதான கொடூரமான அடக்குமுறையின் போது 6,373 பேரைக் கொன்ற பின்னர், ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின்(Iran) இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை(IRGC) ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட உள்ளது என்று ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ்(Kaja Kallas) குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஆதரவை வழங்கினால், ஈரானின் புரட்சிகர காவல்படையை அல்-கொய்தா(al-Qaeda), இஸ்லாமிய அரசு(IS), டேஷ்(Daesh) மற்றும் ஹமாஸ்(Hamas) போன்ற பயங்கரவாத குழுக்களுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “நீங்கள் […]

Learn about Radikaa's dramatic transformation in ‘தாய்கிழவி’ through groundbreaking prosthetic makeup techniques and artistry! பொழுதுபோக்கு

பிம்பத்தை உடைத்த ‘குயின்’: ராதிகாவின் மிரட்டலான ‘தாய்கிழவி’ அவதாரம்!

  • January 29, 2026
  • 0 Comments

அடையாளத்தை அழித்து உருவான ‘தாய்கிழவி’: ராதிகாவின் பிரமிக்க வைக்கும் உருவமாற்றமும்! தொழில்நுட்ப ரகசியங்களும்! திரையுலகில் பல தசாப்தங்களாகத் தனது ஆளுமையைச் செலுத்தி வரும் ‘குயின்’ ராதிகா சரத்குமார், அண்மையில் ஒரு கிராமத்து ஏழைப் பாட்டியாக உருமாறிய விதம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு முன்னணி நடிகை, தனது பிம்பத்தைச் சற்றும் யோசிக்காமல் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தன்னை உருமாற்றிக் கொண்டது ஒரு ‘கலை பொக்கிஷம்’.   இந்த உருமாற்றத்தின் பின்னால் இருந்த தொழில்நுட்பமும் உழைப்பும் அளப்பரியது. வெறும் […]

இந்தியா செய்தி

நொய்டாவில் விஷம் குடித்து பெற்றோர் மரணம் – 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  • January 29, 2026
  • 0 Comments

நொய்டாவில்(Noida) ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ஷ்ரவன் மற்றும் அவரது மனைவி நீலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இந்த தம்பதியினர் குழந்தைகைளுடன் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தம்பதியினரின் 10, 8 மற்றும் 4 வயதுடைய மூன்று குழந்தைகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை சீராக […]

இலங்கை செய்தி

இலங்கையில் பேராபத்தாக மாறிய புற்றுநோய்-  நாளொன்றுக்கு 40  பேர் உயிரிழப்பு

  • January 29, 2026
  • 0 Comments

இலங்கை தற்போது ஒரு அமைதியான புற்றுநோய் தொற்றை எதிர்கொண்டு வருகிறது. தினமும் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளர்கள் கண்டறியப்படுவதுடன், சுமார் 40 பேர் உயிரிழப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தலைவர் டொக்டர் ஹசரேலி பெர்னாண்டோ, இந்த அதிகரிப்புக்கு புகையிலை பயன்பாடு, மதுபானம், டீசல் புகை, பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் எரித்தல், தொழிற்சாலை வாயுக்கள் மற்றும் சிவப்பு இறைச்சி உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணங்கள் என கூறினார். குறிப்பாக ஆண்களில் வாய்ப்புற்றுநோய் […]

உலகம் செய்தி

சீனாவில் பண மோசடியில் ஈடுபட்ட 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

  • January 29, 2026
  • 0 Comments

மியான்மரில்(Myanmar) மோசடி மையங்களை நடத்திய 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின்(China) கிழக்கு ஜெஜியாங்(Zhejiang) மாகாணத்தில் உள்ள வென்சோவில்(Wenzhou) உள்ள ஒரு நீதிமன்றத்தால் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. வடக்கு மியான்மரின் நான்கு குடும்பங்களை உள்ளடக்கிய மிங்(Ming) குடும்பம், இணைய மோசடி, விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் உற்பத்திகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். இந்நிலையில், தூக்கிலிடப்பட்டவர்களின் குற்றங்களில் வேண்டுமென்றே கொலை செய்தல், […]

ஐரோப்பா

UKவில் மருத்துவர் ஒருவரின் மோசமான செயல் – 100 குழந்தைகள் பாதிப்பு!

  • January 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் (Great Ormond Street) மருத்துவமனையில் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர் ஒருவரால் ஏறக்குறைய 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. யாசர் ஜப்பார் (Yaser Jabbar) என்ற மருத்துவர் மீதே மேற்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற லண்டன் மருத்துவமனையால் வெளியிடப்பட்ட விசாரணையில், அவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சைகளில் நடைமுறைக்கு ஏற்றுக்கொள்ள முடியாத பல சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதற்கு பரவலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஜப்பார் 2017 மற்றும் […]

செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

  • January 29, 2026
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல ஆஸ்திரேலியா அணி டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தவகையில், இன்று லாகூரில்(Lahore) முதலாவது டி20 போட்டி ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில், சைம் ஆயுப்(Saim Ayub) 40 ஓட்டங்களும் சல்மான் அகா(Salman Agha) 39 ஓட்டங்களும் பெற்றனர். இந்நிலையில், […]