ஐரோப்பா

தொட்டாலே மரணம் தான் … பிரித்தானியாவில் வளர்க்கப்படும் மிக ஆபத்தான தாவரம்!

  • July 9, 2023
  • 0 Comments

உலகின் மிக ஆபத்தான தாவரம் ஒன்று தற்போது பிரித்தானியாவில் வளர்க்கபப்ட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அந்த தாவரத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரித்தானியாவில் நார்தம்பர்லேண்ட் பகுதியில் அமைந்துள்ள விஷப்பூங்காவில் Gympie-Gympie எனப்படும் அந்த ஆபத்தான தாவரம் வளர்க்கப்படுகிறது.தொடர்புடைய விஷப்பூங்காவில் வளர்க்கப்படும் தாவரங்கள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று பார்வையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விஷப்பூங்காவில் இடம்பெற்றுள்ள Gympie-Gympie எனப்படும் அந்த ஆபத்தான தாவரம் பொதுவாக அவுஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் […]

மத்திய கிழக்கு

சூடானில் குடியிருப்பு பகுதியில் வான்வழி தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு

  • July 9, 2023
  • 0 Comments

சூடான் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டது. துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் […]

பொழுதுபோக்கு

“விடாமுயற்சி”க்கு மீண்டும் விஷ்வரூப பிரச்சினை எழுந்தது

  • July 9, 2023
  • 0 Comments

விடாமுயற்சி படத்தின் புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி திரை கதையை தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டாராம். இதுவரை கதை கேட்காமல் இருந்த நடிகர் அஜித்குமார் கதையைக் கேட்டு சம்மதம் சொல்லிவிட்டாராம். இதனால் படத்தின் ஒரு முக்கியமான வேலை முடிந்து இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக விக்னேஷ் சிவன் கதை சொல்லி அதில் திருப்தி இல்லாமல் தான் அஜித் அவரை நீக்கிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது […]

இலங்கை

ஜனாதிபதி மாளிகையில் காணாமல்போன பதக்கங்களை கண்டுப்பிடிக்க உதவுமாறு கோரிக்கை!

  • July 9, 2023
  • 0 Comments

ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல் போன உத்தியோகபூர்வ பதக்கத்தை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஆளுனர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் உத்தியோகப்பூர்வ பதக்கங்கள் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பதக்கங்கள் யாரிடமாவது இருந்தால் அவற்றை ஜுலை 31 ஆம் திகதிக்கு முன்னர்   ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

உலகம்

இரண்டு வயது குழந்தையை நீரில் மூழ்கடித்து கொல்ல முயற்சி… உதவி கோரியுள்ள பொலிஸார்

  • July 9, 2023
  • 0 Comments

இரண்டு வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நபரொருவர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பொது மக்களிடம் உதவிகோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புகைப்படத்தில் காணப்படும் நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பில் தகவல் வெளிவராத நிலையில் சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளியினை கருத்திற்கொண்டு பொலிஸார் […]

இலங்கை

திருகோணமலையில் மர்ம நபர்கள் அட்டகாசம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

  • July 9, 2023
  • 0 Comments

திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவதற்காக வைத்திருந்த (மெட்டின்) கடினப்பந்து விரிப்புகள் இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் (08) நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மேலதிக விசாரணையை திருகோணமலை தலைமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

பிரான்ஸில் TikTok செயலியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • July 9, 2023
  • 0 Comments

பிரான்ஸில் குறுகிய வடிவ காணொளிகளை பதிவுகளாக கொண்ட TikTok சமூகவலைத்தளத்தினால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அது தொடர்பில் பிரான்ஸில் செனட் மேற்சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுவர்களிடையே சிந்திக்கும் திறனை வெகுவாக கட்டுப்படுத்துகிறது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. செனட் மேற்சபையினரின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்த சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. பிரான்சில் 22 மில்லியன் பேர் TikTok தளத்தினை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக 4 தொடக்கம் 18 வயதுடைய சிறுவர்கள் நாள் ஒன்றில் 2 மணிநேரத்தினை இதில் […]

ஐரோப்பா

வேல்ஸில் வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • July 9, 2023
  • 0 Comments

வேல்ஸில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன சாரதிகளுக்கு அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நார்த் வேல்ஸ் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, குறிப்பாக பிளின்ட்ஷயர் கடற்கரை சாலையில். கனமழையால் கொன்னாஸ் குவே, ஓகன்ஹோல்ட் பேப்பர் மில், ஜான்ஸ்டவுன், சால்ட்னி, ரெக்ஸ்ஹாம் மற்றும் கிரெஸ்ஃபோர்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டள்ளது. அத்துடன் இந்த பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் ( […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – மகளின் காதலால் பறிபோன தந்தையின் உயிர்

  • July 9, 2023
  • 0 Comments

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவிசாவளை, பதுவத்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் மகளும் தாக்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களது வீட்டில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர் மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் யுவதியை தாக்கியுள்ளார். இதன்போது, குறுக்கிட்ட யுவதியும் தந்தையையும் அந்த இளைஞன் தாக்கியுள்ளார். […]

இலங்கை

பிக்கு மற்றும் இரு பெண்களை நிர்வாணமாக்கி தாக்கிய விவகாரம் : எட்டு பேருக்கு விளக்கமறியல்!

  • July 9, 2023
  • 0 Comments

நவகமுவ,  பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக் கூறப்படும் யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு நேற்று (ஜுலை 08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த 08 பேரையும் வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் […]