இலங்கை

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி அகழ்வுக்கான பணிகள்! பாதீடு விரைவில் சமர்ப்பிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான பாதீடு எதிர்வரும் 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த பாதீடு ஆராயப்பட்டு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள அமைப்பதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டது. நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கிய உத்தரவையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ஆர்.பிரதீபன் தலைமையிலான குழுவினர் மேற்படி பகுதிக்கு இன்று கள விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, தொல்பொருள் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் […]

இலங்கை

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை!

  • August 10, 2023
  • 0 Comments

ஈரான்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒன்பது  கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டு விரைவில் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் தெஹ்ரானில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி  சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் உள்ள சபஹார் நகரைச் சேர்ந்த 9 ஈரானிய மாலுமிகள் […]

இலங்கை

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகள்!

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி நேற்று 9 ஆம் திகதி யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டு தங்க பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். நடேஜினி ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக இருந்திருந்தார். வவுனியா பெரிய கோமரசங்குள மாணவிகள் இருவர் பங்குபற்றி ஒரு வெள்ளி பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும்பெற்று […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தையின் அழுகையை நிறுத்த மதுபானம் கொடுத்த பெண்!

  • August 10, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான் பெர்னார்டினோ கவுண்டியை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை அழுவதை நிறுத்துவதற்கு பாட்டிலில் மதுபானம் ஊற்றி கொடுத்துள்ளார். இதனையடுத்து அப்பெண்னை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறிப்பிட்டுகையில், சம்பந்தப்பட்ட பெண் ரியால்டோ வழியாக ஆல்கஹால் நிரப்பி பெண் கொடுத்துள்ளார். இதனையடுத்து குழந்தை உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதை அறிந்து உடனடியாக மருத்துவமனையில் ஹொனெஸ்டி டி லா டோரே அனுமதித்துள்ளார். குழந்தையின் உடலில் நச்சுத்தன்மை ஏறி இருப்பதை மருத்துவர் கண்டுப்பிடித்தனர். இந்நிலையில் […]

இலங்கை

இலங்கையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் போர் கப்பல்!

  • August 10, 2023
  • 0 Comments

சீனாவின்  HAI YANG 24 HAO என்ற போர்கப்பல் இன்று (10.08) காலை சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மற்றும் கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார். இதற்கிடையில், இந்த கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

ஜப்பானிய நிதியுதவியின் கீழ் விவசாயிகளுக்கு யூரியா வழங்கும் நிகழ்வு

  • August 10, 2023
  • 0 Comments

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக யாழ் மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் இன்று வழங்கியவைக்கப்பட்டது. யாழ் சாவகச்சேரி கமநல சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸூகோஷி ஹிடோகி,வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ்,ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயம் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப் பிரதிநிதி விஜேந்திர சரண், யாழ். மாவட்ட கமநல […]

ஆசியா

உலகின் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?

  • August 10, 2023
  • 0 Comments

உலகின் மிகவும் மாசுப்பட்ட நகரமாக இந்தோனேசியாவின் தலைநகரான  ஜகார்த்தா தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய காற்று மாசுபாடு குறித்து சுவிஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஜகார்த்தாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காற்று மாசுபாட்டின் விளைவுகளால் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

”ஊழல்பற்றி நாங்கள் வாய்துறந்தால் சாணக்கியன் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்”- த.சிவானந்தராஜா

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல்பற்றி நாங்கள் வாய்துறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சாணக்கியன் தனது வேட்டியை ஒவ்வொரு இடமாக வீசி தற்போது சூறை முள்பத்தையில் வீசியுள்ளதாகவும் அதன் தாக்கம் இனி அவருக்கு தெரியவரும் எனவும் இதன்போது தெரிவித்தார். போராட்டத்தைப்பற்றியும் அதன் […]

வட அமெரிக்கா

ட்விட்டருக்கு 11.18 கோடி அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்…!

  • August 10, 2023
  • 0 Comments

தேர்தல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.11.18 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு […]

இலங்கை

மட்டக்களப்பில் பாலம் ஒன்றிற்கு கீழ் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

  • August 10, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு கீழ் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பார் வீதியில் உள்ள சிறிய பாலத்திற்கு கீழ் சுமார் 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.