ஐரோப்பா

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல்: 129 பேர் கைது

பாகிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக 129 முஸ்லிம்களை அந்நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் ஃபைசலாபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்வாலா நகரில் ராஜா அமிர் என்ற கிறிஸ்தவர், குரான் புத்தகத்தின் சில பக்கங்களை கிழித்தெறிந்ததாக பரவிய தகவலை அடுத்து, அந்த நகரில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வீடுகள் மீது ஒரு கும்பல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு தேவாலயம் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், 4 தேவாலயங்கள் […]

பொழுதுபோக்கு

‘மெட்டி ஒலி 2’ உருவாகிறதா ? ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் பதில்

  • August 20, 2023
  • 0 Comments

‘மெட்டி ஒலி’ சீரியலின் இரண்டாவது சீசன் உருவாகவுள்ளதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் திருசெல்வம் விளக்கமளித்துள்ளார். ​ சன் டிவியில் இல்லத்தரசிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியல் ‘மெட்டி ஒலி’. 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொடராக ஒளிப்பரப்பான இந்த சீரியலை திருமுருகன் இயக்கியிருந்தார். இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா,சேத்தன், நீலிமா ராணி மற்றும் திருச்செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த சீரியலில் வரும் ஓபனிங் பாடலான அம்மி.,அம்மி.,அம்மி மிதிச்சு… அருந்ததி முகம் பார்த்து… என்ற […]

இலங்கை

திருப்பி அடியுங்கள் : அது சட்டத்திற்கு உட்பட்டதே – மனோ!

  • August 20, 2023
  • 0 Comments

அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயத்தில் நடைபெற்ற, மலையகம்-200 நூல் வெளியீட்டு விழாவில் மாத்தளை மாவட்ட ரத்வத்தை தோட்டத்தில் தமிழ் தொழிலாளர் சொத்துகள் சேதப்படுத்தியமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், அதுதான் உங்களுக்கு புரிகின்ற பாஷை என்றால் அதை பேச […]

இலங்கை

சிங்கப்பூருக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி!

ஜனாதிபதி உள்ளிட்ட தூதுகுழுவினர் நாளை இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விஜயத்தின் போது ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்புக்கான சிரேஸ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்த்தன, ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்களுக்கான விசேட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க உள்ளிட்டோர் பயணிக்கவுள்ளனர்.

இலங்கை

இலங்கை அரசாங்கம் IMF உடன் செய்துக்கொண்ட நிபந்தனைகளில் 35 வீதத்தையே பூர்த்தி செய்துள்ளது!

  • August 20, 2023
  • 0 Comments

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்வைத்த நிபந்தனைகளில் 35 வீதமானவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உண்மை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை அளக்க நிறுவனம் அறிமுகப்படுத்திய திட்டத்தின் படி இது தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலைக்குள், திட்டத்தின் நிபந்தனைகளில் 57 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 35 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று வெரிட்டி ரிசர்ச் தெரிவித்துள்ளது. நிதி நிதியத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவின்படி இலங்கை முன்னேறவில்லை என்று […]

இந்தியா

கர்நாடகாவில் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்!

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று கர்நாடகாவில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுத தளவாடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுத உற்பத்தியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது. டி.ஆர்.டி.ஓ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பானது ஏவுகணை சோதனை மற்றும் விமானங்கள் சோதனையை அவ்வப்போது நடத்துவது வழக்கம். அந்த வையில், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான ஒரு ஆளில்லா விமானம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் விழுந்து நொறுங்கிய லூனா-25! குழப்பத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள்

ஏறக்குறைய 50 ஆண்டுகளில் ரஷ்யாவின் முதல் நிலவு பயணமான லூனா -25 ஆய்வு, தரையிறங்குவதற்கு முந்தைய சூழ்ச்சியின் போது நிலவில் விழுந்ததாக ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லூனா-25 உடனான தொடர்பு சனிக்கிழமை மதியம் 2:57 மணிக்கு (1157 GMT) துண்டிக்கப்பட்டது என ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பூர்வாங்க கண்டுபிடிப்புகளின்படி, “நிலவின் மேற்பரப்பில் மோதியதைத் தொடர்ந்து லேண்டர் இல்லாமல் போய்விட்டது” என்று தெரிவிக்கப்படுகின்றது. “நேற்றும் (19)இன்று (20 ) லூனா-25 […]

உலகம்

ஈக்வடோரில் மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிபிரயோகம்!

  • August 20, 2023
  • 0 Comments

ஈக்வடாரில் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஈக்வடார் நாட்டின் முன்னாள் துணை அதிபரும் ஓட்டோ சோனென்ஹோல்ஸ்னர் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதே  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து துரித விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஈக்வடார் ஜனாதிபதி வேட்பாளர் […]

இலங்கை

மதுரை – கொழும்பு விமான சேவை ஆரம்பம்!

இந்தியாவின் பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட் இன்று (ஆகஸ்ட் 20) முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையைத் தொடங்குகிறது. முன்னதாக ஜூலை மாதம், ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு முறையில், ஆகஸ்ட் 20, 2023 முதல் வாரந்தோறும் ஆறு முறை மதுரை – கொழும்பு விமான சேவையை மீண்டும் தொடங்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது. அதன்படி, பட்ஜெட் கேரியர் இந்தியாவின் மதுரை மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) இடையே […]

இலங்கை

திருகோணமலையில் கடல்பயணங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

  • August 20, 2023
  • 0 Comments

திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவை பார்வையிடும் கடல் பயணங்களை மீள ஆரம்பிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவுக்குச் செல்வதற்கான  முன்னோடித் திட்டம் நேற்று (19.08) ஆரம்பமாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. திருகோணமலை இயற்கை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவின் பவளப்பாறைகளை பார்வையிடுவதற்கு தேவையான கடற்பயண வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த முன்னோடி திட்டமானது பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் வழங்கும் எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.