இந்தியா

கர்நாடகாவில் விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்!

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று கர்நாடகாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுத தளவாடங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுத உற்பத்தியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் மேற்கொண்டு வருகிறது.

டி.ஆர்.டி.ஓ என்று அழைக்கப்படும் இந்த அமைப்பானது ஏவுகணை சோதனை மற்றும் விமானங்கள் சோதனையை அவ்வப்போது நடத்துவது வழக்கம்.

அந்த வையில், இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு சொந்தமான ஒரு ஆளில்லா விமானம் (Tapas 07A) இன்று வழக்கமான சோதனைக்கு சென்றது. அப்போது எதிர்பாரத விதமாக கர்நாடகா மாநில சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமான விபத்துக்குள்ளானதும் அந்த இடத்தில் சத்தம் கேட்டதோடு தீ பிடித்தது எரிந்து புகை வெளியேறியது.

இதை கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கிராம மக்கள் அதிக அளவில் கூடியதால் போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே