வட அமெரிக்கா

உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கவுள்ள அமெரிக்கா

  • September 8, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய […]

இலங்கை

வடகிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கையை இராணுவமே செய்து வருகிறது- அருட்தந்தை மா.சத்திவேல்

  • September 8, 2023
  • 0 Comments

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்திற்கூடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் இன்று (08.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமய தலைமைகள் தமது சமய உண்மையில் நின்று சமய அமைப்புக்கள் தந்துள்ள அதிகாரத்தையும், சமூக கௌரவத்தையும், பயன்படுத்தி சமூக நல்லிணக்கம் சமயங்களுக் கிடையிலான நல்லுறவு என்பவற்றை வளர்க்கவும், […]

இலங்கை

அதிகளவு செலவு செய்யும் அமைச்சுகளை ஆராய நடவடிக்கை!

  • September 8, 2023
  • 0 Comments

அதிகளவு பணம் செலவிடப்படும் 10 அமைச்சுக்களின் செலவுகளை ஆராய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்று மொழிகளிலும் பகுப்பாய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரலியகஹா மன்றில் இன்று (08.09) நடைபெற்ற “தேசிய மதிப்பீட்டுக் கொள்கை கட்டமைப்பை” வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தேசிய கொள்கைப் பொறிமுறையின் அடிப்படையில் மின்சார விநியோகத்தை அனுமதிக்க முடியும் எனவும் கூறினார்.

ஆசியா

துபாயில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து : இருவர் பலி!

  • September 8, 2023
  • 0 Comments

இரண்டு விமானிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் துபாய் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று (07.08) இடம்பெற்றுள்ளது. காணாமல் போன விமானிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான பெல் 212 ரக ஹெலிகாப்டரின் விமானிகளில் ஒருவர் எகிப்தியர் மற்றவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையின் சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் தேவைப்படுகிறது!

  • September 8, 2023
  • 0 Comments

இலங்கையின் சுகாதாரத்துறையை மீட்டெடுக்க 500 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாட்டை வங்குரோத்து பட்டியலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை மீது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நாடு வங்குரோத்து நிலைமைய அடைந்தமைக்கு ஒருசிலர் மாத்திரம் காரணம் அல்ல எனவும் அதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் […]

இலங்கை

திருகோணமலையில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபரீதம் – பலர் காயம்

  • September 8, 2023
  • 0 Comments

திருகோணமலை -கோமரங்கடவல பகுதியில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது. கோமரங்கடவல திரியாய் சந்தியில் உள்ள விகாரையொன்றில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்ற மொறவெவ -மயிலகுடாவ பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஐவர் காயமடைந்த நிலையில் நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மஹதிவுல்வெவ மற்றும் -கோமரங்கடவல […]

ஆசியா

ஆசியாவுக்கான எண்ணெய் விலையை உயர்த்திய சவுதி!

  • September 8, 2023
  • 0 Comments

ஆசியாவுக்கான எண்ணெய் விலையைத் தொடர்ந்து 4வது மாதமாக சவுதி அரேபியா உயர்த்தியுள்ளது. எண்ணெய்ச் சந்தையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை நீட்டிக்க அந்நாடும் ரஷ்யாவும் முடிவெடுத்த மறுநாள், விலை உயர்த்தப்பட்டுள்ளது. சவுதி அரசாங்கத்தின் Saudi Aramco நிறுவனம் Arab Light ரக எண்ணெயின் விலையைப் பீப்பாய்க்குப் 10 காசு கூட்டியது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அந்த அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை. இருப்பினும் எதிர்பார்க்கப்பட்ட 30 காசு ஏற்றத்தைவிட அது குறைவாகும். OPEC எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் […]

பொழுதுபோக்கு

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன், ஜோதிகா… இவர்களுடன் அஜய்

  • September 8, 2023
  • 0 Comments

மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மூவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்கள். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளனர். விகாஷ் பால் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படம் சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் 2024 ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவனும், ஜோதிகாவும் […]

இலங்கை

வவுனியாவில் திடீரென மாயமாகிய சிறுமியின் சடலம்!

  • September 8, 2023
  • 0 Comments

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் சடலம்  திடீரென மாயமாகியுள்ளது. கடந்த மாதத்தில் வவுனியா நெளுக்கும் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உறவினர்கள் இராசேந்திர குளம் பகுதியில் உள்ள மயானத்தில உடலை புதைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது சிறுமியின் சடலம்  இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   […]

ஆசியா

சீனாவில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய புதிய சட்டம்!

  • September 8, 2023
  • 0 Comments

சீன சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கருத்துகளையும் ஆடைகளையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான சட்டத்தின் நகல் வரைவு சீனாவில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் நடப்புக்கு வந்தால் பிடிபடுவோருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றர். விதிமீறல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. சீன தேசத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் ஆடைகளை அணிவோர் 15 நாள்கள் வரை சிறையிலடைக்கப்படலாம். அவர்களுக்கு 680 டாலர் அபராதமும் விதிக்கப்படலாம். தேசத்தின் உணர்வுகள் புண்படுவதை அதிகாரிகள் எப்படி நிர்ணயிக்க முடியும் என்று […]