இந்தியா

அமெரிக்க அதிபரை கவர்ந்த 12 வயது சிறுமி யார்?.. வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்றிரவு டெல்லிக்கு சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்றவர்களில் சிறுமி ஒருவரும் இருந்தார். அந்த சிறுமியிடம் ஜோ பைடன் சிறிது நேரம் பேசியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. யார் அந்த 12 வயது சிறுமி? என்று இந்திய ஊடகங்களில் விவாதங்கள் சென்றன. தொடர் விசாரணையில், அந்த சிறுமி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் மகள் […]

விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு 258 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

  • September 9, 2023
  • 0 Comments

2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது. போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. இதன்படி, கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி […]

பொழுதுபோக்கு

‘800’ சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன? முரளிதரன்

  • September 9, 2023
  • 0 Comments

என்னுடைய வாழ்க்கையிலிருந்த போராட்டத்தைப் போலத்தான் இந்தப் படத்தை முடிக்கவும் நிறைய போராட வேண்டியிருந்தது என ‘800’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் முத்தையா முரளிதரன் பேசியுள்ளார். முத்தையா முரளிதரனின் ‘800’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “ஒருமுறை இயக்குநர் வெங்கட்பிரபு என் வீட்டுக்கு வந்தபோது நான் வாங்கிய கோப்பைகளை பார்த்தார். உங்களுக்குத் தெரியும் அவர் கிரிக்கெட் தொடர்பாக ‘சென்னை 28’ படத்தை இயக்கியிருந்தார். கோப்பைகளை பார்த்த […]

இலங்கை

நான்காவது நாள் அகழ்வு பணி: மேலும் பல தடையப் பொருட்கள் மீட்பு (Photos)

  • September 9, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது. குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வாய்வின் போது துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள், துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கலாம் […]

இந்தியா ஐரோப்பா

பிரதமர் ரிஷி சுனக்- மோடி இயையே இருதரப்பு பேச்சு வார்த்தை

  • September 9, 2023
  • 0 Comments

G20 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் G20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. இந்த மாநாட்டில் G20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின. இந்த நிலையில் இந்த G20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வணிக உறவை வலுப்படுத்துவது, முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் […]

இலங்கை

வடக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பணிபுரிய பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம்

  • September 9, 2023
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தொல்பொருள் திணைக்களத்தின்கீழ் பணியாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பெரும்பான்மை இனத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் கீழ் பணியாற்ற 30 வரையான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தொல்பொருள் மையங்களில் தங்க தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள், பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாது இருக்கும் போது […]

இலங்கை

“நடந்தாய் வாழி வழுக்கி ஆறு” ஓர் பயணம்!

“நடந்தாய் வாழி வழுக்கி ஆறு” எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணம் இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 8 மணிக்கு தெல்லிப்பழை யில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலியை சென்றடையவுள்ளது. இந்த பயணத்தில் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர் சிறிஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரான்ஸ் அபாயா தடை: பள்ளி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை கைது

  • September 9, 2023
  • 0 Comments

பிரான்ஸ் பள்ளிகளில் மாணவிகள் அபாயா அணிய தடை விதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. பிரான்ஸ் அரசு, கடந்த மாதம், பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் அபாயா என்னும் உடலை மறைக்கும் அங்கியை அணிய தடை விதித்தது. அது கல்வியில் மதச்சார்பின்மை விதிகளை மீறுவதாகக் கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பள்ளி துவங்கிய முதல் நாள் அன்று, சுமார் 300 இஸ்லாமிய மாணவிகள் பள்ளிக்கு அபாயா அணிந்துவந்துள்ளனர். அவர்களில் பலர் அதை அகற்ற ஒப்புக்கொண்ட போதிலும், 67 […]

இலங்கை

யாழ். அளவெட்டி வடக்கு பகுதியில் திடீரென பற்றியெறிந்த அரிசி ஆலை

  • September 9, 2023
  • 0 Comments

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி வடக்கு பகுதியில் இன்று காலை திடீரென பற்றியெறிந்த தீயினால் முற்றாக சேதமடைந்த அரிசி ஆலை. இச் சம்பவம் தொடர்பாக, நேற்றய தினம் மாலை அரிசி ஆலையில் வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் பூட்டப்பட்டது பின்னர் இன்று காலை 8 மணி அளவில் அரிசி ஆலையை திறக்கச் சென்றபோது அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர் அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் இதன்போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான […]

இலங்கை

தவறான சிகிச்சையினால் கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்! அருண் சித்தார்த்

கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அருண் சித்தார்த் அரச வைத்தியசாலைகள்தான் ஏழைகளுக்கு இருக்கின்ற ஒரே புகலிடம் எனவும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் இவ்வாறு தெரிவித்துள்ளனர். அவர் மேலும் தெரிவிக்கையில், சில தினங்களுக்கு முன்பு யாழ். போதனா வைத்தியசாலையில் தவறான சிகிச்சையினால் தனது கரத்தை இழந்த சிறுமியான வைஷாலி தொடர்பான செய்திகள் சர்ச்சைகள் சமூகத்தில் மேலெழுந்த வண்ணம் […]