உலகம்

காசாவில் போரால் மாண்டவர்களின் எண்ணிக்கை மதிப்பிட்டதை விட அதிகம்!

  • February 19, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போரால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை முன்பு மதிப்பிட்டதை விட அதிகமாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்ட சுயாதீன ஆய்வில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 75,000 க்கும் மேற்பட்ட “வன்முறை மரணங்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் (MoH) நிர்வாக பதிவுகள் ஒரு அதிகப்படியான எண்ணிக்கையை விட ஒரு பழமைவாத “தளத்தை” பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி […]

இலங்கை செய்தி

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவரஞ்சினி நியமனம்!

  • February 19, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (19.02.2026) காலை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள திருமதி சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் […]

பொழுதுபோக்கு

வேள்பாரி நாயகனாக தனுஷ்?

  • February 19, 2026
  • 0 Comments

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அப்படத்தில் நடிகராக தனுஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கரிடம் இது தொடர்பில் நடிகர் தனுஷ் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இயக்குநர் ஷங்கரின் இந்தியன் – 2 திரைப்படம் வசூலில் தோல்வியடைந்தது. அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் – 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது. இந்நிலையில் இயக்குநர் […]

ஐரோப்பா

குத்தகை நல்லதல்ல – ஸ்டாமர் தவறு செய்கிறார் : ட்ரம்ப் எச்சரிக்கை!

  • February 19, 2026
  • 0 Comments

சாகோஸ் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை மொரீஷியஸுக்கு மாற்றுவதற்கும், இங்கிலாந்து-அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவை குத்தகைக்கு எடுப்பதற்கும் பிரத்தானியா தீர்மானித்துள்ள நிலையில், ஸ்டாமர் மிகப் பெரிய தவறு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  டியாகோ கார்சியாவை விட்டுக்கொடுக்காதீர்கள்!” ஈரானிடமிருந்து ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்குதலை எதிர்கொள்ள எதிர்காலத்தில் எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் இந்தத் தளம் […]

விளையாட்டு

T20 World Cup: இன்றைய போட்டிகள் தொடர்பான விபரம்…!

  • February 19, 2026
  • 0 Comments

ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (17) மேலும் மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 37 ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலிItaly மற்றும் மேற்கிந்திய தீவுகள் West Indies அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி முற்பகல் 11.00 மணிக்கு Eden Gardens நடைபெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் உட்பட 8 அணிகள் ஏற்கனவே சூப்பர் – 8 சுற்றுக்குள் சென்றுவிட்டதால் இன்றைய ஆட்டம் அடுத்த கட்டம் தொடர்பில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 38 ஆவது லீக் போட்டியில் இலங்கை […]

அரசியல் இலங்கை செய்தி

‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்’ பற்றி கதைத்தால் இணைவு சாத்தியமில்லை!

  • February 19, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுக்கிடையிலான பேச்சு எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் இறுதிப்படுத்தப்படும்.” இவ்வாறு ஐ.தே.கவின் UNP பிரதி செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ Harin Fernando தெரிவித்தார். அடுத்த தேர்தலை கூட்டணியாகவே எதிர்கொள்வோம் எனவும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ ஐக்கிய மக்கள் சக்தி SJP இணைவுக்கு தாமதப்படுத்தினால் அது அக்கட்சிக்கே பாதகமாக அமையும். இணைவுக்குரிய பேச்சு நடக்கும்போது அடுத்த ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

பாதாள குழுக்களுக்கு முடிவு கட்டப்படும்!

  • February 19, 2026
  • 0 Comments

“இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது.” இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் இத்தகைய குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய எவரும், எத்தகு அதிகாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், ” நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் இந்தளவுக்குக் […]

உலகம் செய்தி

இன்னும் கலையாத ‘போர் மேகம்’

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் இன்னும் தணியவில்லை. அது தொடர்ந்து பதற்ற நிலையிலேயே இருக்கின்றது. ஈரான் உடனடியாக ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும் என்றும், தவறினால் கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்காது என்று அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவிதத்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் ராணுவப் பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் அதிநவீன […]

#UKLaw #TechNews #OnlineSafety #CyberSecurity #TamilNews #48HoursRule #SafetyFirst அறிவியல் & தொழில்நுட்பம்

“48 மணி நேரம் மட்டுமே!” – டெக் நிறுவனங்களுக்குப் பிரிட்டன் அரசு விடுத்த எச்சரிக்கை.

  • February 18, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்களுக்கு எதிராக ஒரு கடுமையான சட்டத்தை அறிவித்துள்ளார். பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான சமுக வலைதள வன்முறையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நபர் தனது அனுமதி இல்லாமல் நெருக்கமான அல்லது ஆபாசமான தனது படங்கள் பகிரப்பட்டுள்ளதாக  புகாரளித்தால், அந்தத் தளம் 48 மணி நேரத்திற்குள் அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்பது இனி சட்டபூர்வமான […]

உலகம்

காசாவில் மீளவும் துப்பாக்கிச்சூடு – இரு பாலஸ்தீனியர்கள் பலி!

  • February 18, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் இன்று நடத்திய தனித்தனி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மத்தியப் பகுதியில் உள்ள அல்-முக்ரகா ( al-Mughraqa) மற்றும் தெற்கே ரஃபாவின் அல்-மவாசி (  al-Mawasi ) ஆகிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் அமைதி ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல்களில் மொத்தமாக 600 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 1,600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன […]