செய்தி

முல்லைத்தீவில் பொதுமுடக்கம்! பல சேவைகள் ஸ்தம்பிதம்!

  • October 20, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட முடியாத நிலமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு முல்லைத்தீவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது. அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிககுறைவாக காணப்பட்டது. இதேவேளை அரச பேருந்து சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்துச்சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால் கல்விச்செயற்பாடுகள் வழமைபோல […]

இலங்கை

வடக்கு கிழக்கில் ஹர்த்தால் – வழமைபோன்று இயங்கும் சேவைகள்

  • October 20, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு மாகாணத்தில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்ட ஹர்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள போதிலும் ஏனைய சேவைகள் வழமைபோன்று நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகள் வழமைபோன்று இயங்குவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது போக்குவரத்துகள் அனைத்தும் இயங்குவதை காணமுடிகின்றது. வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்றுத்தல் ஆகியவற்றினை கண்டித்து தமிழ் தேசிய கட்சிகளினால் இன்று ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் வழமைபோன்று […]

இலங்கை

முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஆதிவாசிகள்!

  • October 20, 2023
  • 0 Comments

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நாளை பயணம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60 ஆதிவாசிகள் குழுவினரே முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு (21, 22.10.2023) ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு தாம் செல்லும் முதல் பயணமாக இது அமைவதாகவும், இரண்டு நாட்களும் யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற இடங்களை சுற்றி பார்வையிட்டு மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

இலங்கை

முற்றாக முடங்கியது புதுக்குடியிருப்பு நகர்

  • October 20, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி கோரியும் , நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு கிழக்கில் இன்றையதினம் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளது. அரச திணைக்களங்களின் சேவைகள், மருந்தகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் உணவகங்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பொதுசந்தை முழுமையாக முடங்கிய நிலையில் காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இலங்கை

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் – முற்றாக முடங்கிய யாழ்ப்பாணம்

  • October 20, 2023
  • 0 Comments

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது. தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்தது. தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன. […]

இந்தியா

இந்தியா – கனடா பிரச்சினை : இருநாட்டு தூதுவர்கள் வெளியேற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

  • October 20, 2023
  • 0 Comments

இந்தியாவில் உள்ள தனது இராஜதந்திரிகளின் எண்ணிக்கையை கனடா 62 இலிருந்து 21 ஆகக் குறைத்ததன் மூலம்,  சர்வதேச மாணவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து  சென்றுள்ள நிரந்தர குடியிருப்பாளர்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கனடாவும் 41 இராஜதந்திரிகள் வெளியேறுவதை அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள  கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, “துரதிர்ஷ்டவசமாக, இந்த வெகுஜன வெளியேற்றம் எங்கள் செயல்பாடுகளை பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளார். குளோபல் அஃபர்ஸ் கனடா வெளியிட்ட அறிக்கையில், […]

வட அமெரிக்கா

இஸ்ரேலியர்களுக்கு விசாவை தளர்த்திய அமெரிக்கா!

  • October 20, 2023
  • 0 Comments

அமெரிக்காவுக்கு பயணிக்கும் இஸ்ரேலியர்கள், 90 நாள்கள் அல்லது அதற்கும் குறைவாக விசா இல்லாமல் வந்து செல்லும் வகையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செப்டம்பர் 27 அன்று இஸ்ரேலை விசா தள்ளுபடி திட்டத்தில் அனுமதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் ஆசியாவைச் சேர்ந்த 40 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவிற்கு பயணம் செய்ய […]

வாழ்வியல்

உடலில் அதிசய மாற்றங்களை ஏற்படுத்தும் நெல்லிக்காய் ஜூஸ்!

  • October 20, 2023
  • 0 Comments

நெல்லிக்காயில் உள்ள அற்புதமான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மதிப்பின் காரணமாக இது சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. மேலும், அதில் சர்க்கரை மிகக் குறைவாகவே உள்ளது. ஆகையால் இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது பொதுவாக நெல்லிக்காய் சாறு, சட்னி, காய்கறி, ஊறுகாய் மற்றும் இன்னும் பிற வகைகளில் சமைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றது. எடையைக் […]

இலங்கை

தலவாக்கலையில் நச்சு வாயுவை சுவாசித்த 09 பேருக்கு நேர்ந்தக் கதி!

  • October 20, 2023
  • 0 Comments

தலவாக்கலை பகுதியில் நச்சுப் புகையை சுவாசித்த 09 பெண்களும் ஒரு ஆணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (19.10) மாலை தலவாக்கலை நகரிலுள்ள ஜவுளி மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் நச்சு புகையை சுவாசித்து நோய்வாய்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடையவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, ​​கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய புகை, நிறுவன ஊழியர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தியதாக […]

ஐரோப்பா

பல்லாயிர கணக்கான ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நொக்கியா

  • October 20, 2023
  • 0 Comments

பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட நொக்கியா நிறுவனம், 14,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இவ்ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நொக்கியா உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் இலாபமும் குறைந்துள்ளது. இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டின் இறுதியில், உலக அளவிலான ஸ்மார்ட்போன் விற்பனையில் பாதி அளவுக்கு நொக்கியா போனாக இருந்தது. 2010ம் ஆண்டுக்குப் பிறகு விற்பனையில் சரிவை சந்தித்தது. எனினும் முன்னணி நிறுவன தயாரிப்புகளுக்கு இணையாக புதுப்புது மொடல்களை அறிமுகம் […]