தென் அமெரிக்கா

பிரேசிலில் விமான விபத்து – பயணித்த அனைவரும் பலி

  • October 30, 2023
  • 0 Comments

பிரேசிலின் வடமேற்கு பகுதியில் உள்ள ஏக்கர் மாகாணத்தில் நேற்று விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அங்கு பயணித்த 12 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நிறுவனமான ART Taxi ஏரியோவால் இயக்கப்படும் இந்த விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஒரு குழந்தை உட்பட அங்கிருந்த அனைவரும் இறந்ததாக ஏக்கர் மாநில அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணங்கள் குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பா

போர்த்துக்கலில் உள்ள வீடுகளில் வாழ ஆர்வம் காட்டும் பிரித்தானியர்கள்

  • October 30, 2023
  • 0 Comments

கடந்த தசாப்தத்தில் போர்த்துக்கலில் உள்ள வீடுகளில் பிரித்தானியர்களின் ஆர்வம் உச்சத்தை எட்டியது 2022 ஒக்டோபரில் 33.6 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2023 ஒக்டோபரில் 37 சதவீத தனிநபர்கள் போர்ச்சுகலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், போர்த்துக்கலில் வீடு வாங்க விரும்பும் பிரித்தானியர்கள் முன்பை விட வேகமாக நகர விரும்புவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2020 ஆம் ஆண்டின் SEF அறிக்கையின்படி, சுமார் 46,238 பிரித்தானிய குடியிருப்பாளர்கள் போர்த்துக்கலில்வசித்து வந்தனர், அவர்களில் பெரும்பாலோர் Faro பிராந்தியத்தில் வாழ்கின்றனர். இரண்டு போர்த்துகீசிய […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Meta நிறுவனத்தின் புதிய முயற்சி – WhatsApp Channelஇல் அறிமுகமாகும் வசதி

  • October 30, 2023
  • 0 Comments

Meta நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகின்றது. அந்தவகையில் அண்மையில் WhatsApp Channel என்கின்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது. அதில் தங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களை பின்தொடரமுடியும். Cricket பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என்று பலர் இதில் இணைந்துள்ளனர். இது One way broadcast Tool ஆகும். இதில் அவர்களுக்கு Reply செய்ய முடியாது. இந்த நிலையில் WhatsApp Channel வசதியில் Voice […]

இலங்கை

இலங்கை முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களுக்கு தயாராகும் அரச ஊழியர்கள்

  • October 30, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி போராட்டங்கள் இடம்பெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று இந்த போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரசாங்க சேவைகள் உட்பட பலர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று பகல் 12.00 […]

ஐரோப்பா

பிரான்சில் 400 பேர் பேர் அதிரடியாக கைது!

  • October 30, 2023
  • 0 Comments

பிரான்சில் 400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக புதிதாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பித்ததன் பின்னர் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல் ஆரம்பித்ததன் பின்னர் பிரான்சில் 800 யூதமத எதிர்ப்பு தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகளூடாக 5,300 குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இந்த 21 நாட்களிலும் மொத்தமாக 406 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவல்களை பிரான்சின் நீதித்துறை அமைச்சர் Eric Dupond-Moretti தெரிவித்தார்.

ஐரோப்பா

பெல்ஜியத்தில் குடியுரிமை பெற்ற 4,075 வெளிநாட்டவர்கள்

  • October 30, 2023
  • 0 Comments

பெல்ஜியத்தில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜூலை மாதத்தில் மொத்தம் 4,075 வெளிநாட்டினர் பெல்ஜியக் குடியுரிமை பெற்றுள்ளதாக பெல்ஜிய புள்ளியியல் அலுவலகமான ஸ்டாட்பெல் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெல்ஜியக் குடியுரிமையைப் பெற்ற மக்களின் முக்கிய நாடுகள் மொராக்கோ, சிரியா, ருமேனியா, இத்தாலி மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்களாகும். புள்ளிவிபரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலகமான யூரோஸ்டாட்டின் கூற்றுப்படி இந்த விடயம் வெளிவந்துள்ளது. பெல்ஜியம் அல்லாத ஒவ்வொரு 100 குடியிருப்பாளர்களுக்கும் 2.7 பேர் பெல்ஜியக் குடியுரிமையைப் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மின்னஞ்சலால் ஏற்பட்ட பரபரப்பு

  • October 30, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் மின்னஞ்சல் ஊடாக அச்சுறுத்தல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் ஊடாக குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் பல மாநிலங்களில் உள்ள பாடசாலைகளுக்கு குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் மின்னஞ்சல் ஊடாக தெரிவித்ததாக தெரியவந்து இருக்கின்றது. குறிப்பாக ஜெர்மனியின் மாநிலங்களான பேர்ளின், பயன் மற்றும் யுரிக்கன் சக்ஸஸ் போன்ற மாநிலங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இவ்வாறு மின்னஞ்சல் மூலமாக குண்டு தாக்குதல் பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்திற்கு கடந்த வாரம் பல நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • October 30, 2023
  • 0 Comments

இலங்கையில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் 24 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது மழைகாலம் நிலவுவதால் டெங்கு நோய் அதிகமாக பரவக்கூடும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

விளையாட்டு

உபாதைக்குள்ளான மேலும் ஒரு இலங்கை கிரிக்கெட் வீரர்

  • October 29, 2023
  • 0 Comments

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் எதிர்வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன. லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமிர அணியில் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, நாளை (30) நடைபெறவுள்ள இலங்கை – ஆப்கானிஸ்தான் போட்டியில் குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக திமுத் கருணாரத்ன விளையாடுவார் என கிரிக்கெட் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்தியா செய்தி

2030ல் இந்தியா ஆசியாவின் 2வது பெரிய சக்தியாக இருக்கும்

  • October 29, 2023
  • 0 Comments

2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் பொருளாதாரம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இரண்டாவது பெரியதாக இருக்கும் என்று S&P Global Market Intelligence தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதற்குள் இந்தியப் பொருளாதாரம் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விஞ்சும் என்று அறிக்கை கணித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் சீனா. இந்த வளர்ச்சியானது விரிவடையும் நுகர்வோர் சந்தை மற்றும் ஒரு பெரிய தொழில்துறையுடன் சேர்ந்து இருக்கும் என்று அது கூறியது. தற்போது, 2023-24ல், இந்தியா பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. […]