பொழுதுபோக்கு

தலைவர் 171-இல் இவரும் நடிக்கிறாரா? மாஸ் தகவலா இருக்கே…

  • November 9, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171வது படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைவர் 171வது படம் எல்சியூ இல்லை என்று லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறியிருந்தாலும், அந்த படத்திலும் மல்டி ஸ்டாரர்கள் நடிப்பது உறுதி என்றார். இந்நிலையில், ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் […]

இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. சாதகமான பதில் கிடைக்காத நிலையில் மாணவர்களால் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இன்று காலை முதல் பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு விசேட விடுமுறை!

  • November 9, 2023
  • 0 Comments

இலங்கையில் பல மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, சப்ரகமுவ மாகாண ஆளுநர்  நவின் திஸாநாயக்க விடுத்துள்ள அறிவிப்பில், எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை 12ஆம் திகதி நடைபெறவுள்ள கற்கைகளை உள்ளடக்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது..

இலங்கை

இலங்கை- கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் : 12 மருத்துவ பீட மாணவர்கள் கைது

மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது குறைந்தது 12 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது. இன்று முற்பகல், ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு 10 இல் உள்ள டீன்ஸ் வீதியை போக்குவரத்துக்காக பொலிஸார் […]

வட அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் கனடா இடையே மதில் சுவர் அமைக்க வேண்டும் – ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி

  • November 9, 2023
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் மதில் சுவர் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி கூறியுள்ளார். எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்கள் கட்சிக்குள் போட்டியிட்டு வருகின்றனர்.அவர்களில் ஒருவராக விவேக் ராமசாமி காணப்படுகின்றார். கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் மதில் சுவர் எழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிராத போதை மருந்து கடத்தல்கள் போன்றவற்றை […]

உலகம்

புளோரிடாவில் இடம்பெற்ற பேரணியில் பைடனை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்!

  • November 9, 2023
  • 0 Comments

மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றிப்பெறச் செய்து மக்கள் தன்னை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்புவார்கள் என நம்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. புளோரிடாவின் ஹியாலியாவில் பேரணி ஒன்றை நடத்திய அவர், GOP விவாதம் குறித்தும், மற்ற போட்டியாளர்கள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட விவாதத்தைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக தனது சொந்த நிகழ்வை நடத்த டிரம்ப் விருப்பம் […]

ஆசியா

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனாமான நடவடிக்கைகள் – ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் மலேசியா

  • November 9, 2023
  • 0 Comments

ஹமாஸுடன் மலேசியா தனது உறவுகளைப் பேணுவதாகவும், பாலஸ்தீன பிரச்சினையை மலேசியர்கள் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்றும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார். ஹமாஸிற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது தடை விதிக்கும் அமெரிக்காவின் சட்ட வரைவிற்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போது பிரதமர் அன்வர் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார். நீண்ட காலமாக பாலஸ்தீனர்களுக்கான ஆதரவு பரவலாக இருக்கும் மலேசியா போன்ற ஒரு நாட்டில் இது அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் வெளிநாட்டு […]

உலகம்

தீவிரமடையும் இஸ்ரேல் போர்: முழு போர் நிறுத்தம் கோராத ஜி7 நாடுகள்

ஹமாஸை அடக்கும்விதமாக இஸ்ரேல் தற்காப்பு நடவடிக்கையாக போரை மேற்கொண்டுள்ளதாக’ கூறி இஸ்ரேலுக்கு ஜி7 கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளும்வகையில் ‘தற்காலிக போர் நிறுத்தம்’ தேவை என்பதை வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டும் என்பதை டோக்கியோ கூட்டம் வாயிலாக இஸ்ரேலிடம் வலியுறுத்தினர். தற்காலிக போர் நிறுத்தம் மட்டுமே கோரியுள்ள ஜி7 கூட்டமைப்பு […]

இலங்கை

இந்திய மற்றும் திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களிடையே கலந்துரையால்

  • November 9, 2023
  • 0 Comments

திருகோணமலையில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் “கல்வி சக்தி” என்னும் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் திருகோணமலை ரோட்டரி கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் (09) இடம்பெற்றது. “கல்வி சக்தி” திட்டத்தின் மூலம் பின் தங்கிய கிராமப் பகுதியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதட்கு சிறந்த ஆசிரியர்களை பயன்படுத்தி இணையம் மூலமாக கற்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் இந்தியாவில் இருந்து வருகை தந்த பெங்களூரு உல்சூர் ரோட்டரி கழகம […]

இலங்கை

காசாவில் தீவிரமடையும் போர் நடவடிக்கை : போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு!

  • November 9, 2023
  • 0 Comments

இஸ்ரேலியப் படைகள் வியாழன் அன்று காசா பகுதியின் வடக்கில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டிடங்கள் மூலம் ஹமாஸ் போராளிகளுடன் தாக்குதல் நடத்தியுள்ளன. மேலும் பாலஸ்தீனப் பகுதி மீதான போர் தீவிரமடைந்ததால் இரு தரப்பும் தங்கள் எதிரிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறின. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார் மற்றும் இரு தரப்பினரும் போர்க்குற்றங்களை இழைத்ததாகக் கூறினார். பாரிஸில், காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைக்கவும், காயமடைந்த பொதுமக்கள் முற்றுகையிலிருந்து தப்பிக்க உதவும் வழிகளைக் […]