இலங்கை- கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் : 12 மருத்துவ பீட மாணவர்கள் கைது
![](https://iftamil.com/wp-content/uploads/2023/11/New-Project-62-1280x700.webp)
மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் போது குறைந்தது 12 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது.
இன்று முற்பகல், ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு 10 இல் உள்ள டீன்ஸ் வீதியை போக்குவரத்துக்காக பொலிஸார் மூடியிருந்த நிலையில், போராட்டம் காரணமாக டீன்ஸ் வீதி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
(Visited 3 times, 1 visits today)