இலங்கை

வெளிநாட்டுக்கு செல்ல காத்திருப்பவரா நீங்கள்..! இலங்கை பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் இவ்வாறான பண மோசடி தொடர்பான 7 முறைப்பாடுகள் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இரண்டரைக் கோடி ரூபா […]

இலங்கை

யாழில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழப்பு!

  • November 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  கைதி ஒருவர் இன்று (19.11) உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான நாகராசா அலெக்ஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டப்பின் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வந்த குறித்த […]

இலங்கை

எம்.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட நகர்த்தல் மனு: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் நிராகரிப்பு

மட்டு கச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட நகர்த்தல் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 4 பேரை விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். சுமந்திரன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (17) கொண்டுவந்த நகர்த்தல் மனு விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார். கடந்த மாச் மாதம் 30 […]

இலங்கை

யாழில் முதியவரொருவருக்கு நேர்ந்த துயரம்!

  • November 19, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் நேற்று (18.11) இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உணவகம் ஒன்றில் பணியாற்றும்   சுப்பிரமணியம் பிறேமராசன் என்கிற 66 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை நடந்த இடத்தில் […]

இலங்கை

விடுதலை செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்கள் : நாட்டை அடைத்தனர்.

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர் 22 பேர் இரண்டு நாட்டுப்படகுகளுடன் பாம்பன் துறைமுகம் சென்றடைந்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் நேற்று பகல் 2 மணியளவில் பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரவு மயிலிட்டி […]

இலங்கை

திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வு நடைபயணம்

  • November 19, 2023
  • 0 Comments

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நடைபயணமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை 10 மணியளவில் ஒன்றுகூடியவர்கள் நகரை சுற்றி நடைபயணத்தில் ஈடுபட்டனர். இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு திருநர் சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம், மனிதர்களை மனிதர்களாக மதிப்போம் என நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். திருநர்களுக்கு எதிரான […]

இலங்கை

இலங்கை – முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப்பொருள் மீட்பு!

  • November 19, 2023
  • 0 Comments

முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப் பொருட்கள் நேற்று (19.11)  மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று (18.11) இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருள்களை கைவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திலிருந்து  பொதி செய்யப்பட்ட  4 கட்டு ஹெரோயினுடன் 10 மில்லி கிராமும்  4 கிராம் குடு போதைப்பொருளும் […]

பொழுதுபோக்கு

“ஐயோ சாமி.. என் குடும்பத்தை விட்டுருங்கபா…” முதன்முறையாக மனம் திறந்த ஐஷு

  • November 19, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் சர்ச்சையில் சிக்கி பாதியிலேயே வெளியேறிய ஐஷு, மனம் வருந்தி போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த கடிதத்தில், பல விஷயம் குறித்து ஐஷு பகிர்ந்து கொண்டுள்ளார். “அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பிய அனைவருக்கும் நான் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளதாக உணர்கிறேன். இந்த நிகழ்ச்சி எனக்கு சிறந்த ஒரு வாய்ப்பை கொடுத்த போதிலும், அதனை நான் கெடுத்து விட்டேன். என்னை […]

இலங்கை

இலங்கையில் கடலுக்குச் சென்ற ஜப்பானியர் உட்பட நால்வர் மாயம்!

  • November 19, 2023
  • 0 Comments

மாரவில, சீ கட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன படகின் உரிமையாளரான மாரவில – வடக்கு மூடுகடுவ பகுதியைச் சேர்ந்த ஸ்ரீயானி ஜீவனி பெர்னாண்டோ இன்று (19.11) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். கடந்த 18ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் மீன்பிடிப்பதற்காக சிறிய டிங்கி படகில் கடலுக்குச்  சென்றுள்ளனர். மீன்பிடிக்கும்போது […]

உலகம்

எதிர்கால AI ஒழுங்குமுறை குறித்து உடன்பாட்டை எட்டியுள்ள ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஒப்பந்தம் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகியவற்றால் எட்டப்பட்டுள்ளது, இது ஐரோப்பிய மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும்ஐரோப்பிய கவுன்சில் ஆகியவை தற்போது இந்த புதிய துறையில் பிளாக் எவ்வாறு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மூன்று அரசாங்கங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய AI வழங்குநர்களுக்கு தன்னார்வ கடமைகளை பிணைக்க ஆதரவாக உள்ளன. […]