இலங்கை

இலங்கை முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு தடுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை!

  • January 4, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விசேட டெங்கு தடுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள டெங்கு அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தலைமையில் சுகாதார அமைச்சில் ஆரம்பமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பொலிஸ் மற்றும் முப்படைகளின் தலைவர்கள், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட மட்டத்தில் இன்று (04.01) முதல் டெங்கு […]

இலங்கை

இந்த வருடத்திலிருந்து மருத்துவ கொடுப்பனவுகளை 100% ஆக உயர்வு : ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியம் இந்த ஆண்டு முதல் மருத்துவ கொடுப்பனவுகளை 100% ஆக உயர்த்தியுள்ளது, இது முன்னர் கண்டறியப்பட்ட நோய்களுக்கான பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. “மருத்துவ உதவிக்கான மாத வருமான வரம்பு ரூபாய் 200,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது நிதி உள்ளடக்கம் மற்றும் பரந்த சுகாதார அணுகலை ஊக்குவிக்கிறது, இது பொதுமக்களுக்கான சுகாதார ஆதரவை மேம்படுத்துவதற்கான நிதியின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி […]

பொழுதுபோக்கு

தினமும் புதுப்புது லுக்கில் விஜய்… மாஸ் போஸ்டர்களை இறக்கும் GOAT… இப்போ என்ன தெரியுமா???

  • January 4, 2024
  • 0 Comments

‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31ம் தேதி வெளியாகி வைரலாகியிருந்தது. ‘The Greatest Of All Time’ என்ற வரிகளுடன் வெளியாகியிருந்த இதில் இளம் வயது விஜய்யும், நடுத்தர வயதில் இருக்கும் விஜய்யும் மிஷனை முடித்துவிட்டு பாராசூட்டில் இறங்கி வருவதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பது உறுதியாகியிருந்தது. மேலும், ‘Light can Devour the Darkness but Darkness cannot consume the Light’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது […]

ஐரோப்பா

உக்ரேனிய அணுமின் நிலையத்தை அணுக ஐநா அணுசக்தி ஆய்வாளர்களுக்கு ரஷ்யா அனுமதி மறுப்பு

ஜபோரிஜியாவில் ஆக்கிரமித்துள்ள உக்ரேனிய அணுமின் நிலையத்தின் சில பகுதிகளுக்கு ஐநா ஆய்வாளர்கள் அணுகுவதை ரஷ்யா மறுத்துள்ளது என்று ஐநா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். 2022 இல் மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து சில நாட்களில் ஜபோரிஜியா ஆலை ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. அணுசக்தி நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சண்டையிடுவது ஐரோப்பா முழுவதற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகள் இனி […]

பொழுதுபோக்கு

அயலான் தமிழ்நாடு பிஸினஸ் மட்டும் இத்தனை கோடிகளா?

  • January 4, 2024
  • 0 Comments

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் அயலான். 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த படம் பட்ஜெட், கொரோனா என பல பிரச்சனைகளில் சிக்கியிருந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகிறது இப்படம். இந்நிலையில் அயலான் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 40 கோடி […]

இலங்கை

திருகோணமலையில் சர்வ மத ஒன்றியம் – ஜனாதிபதியின் கொள்கை பிரிவினருக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

  • January 4, 2024
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் ஜனாதிபதியின் உண்மை நல்லிணக்க பொதுமுறைக்கான கொள்கை பிரிவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04.01) இடம் பெற்றது. திருகோணமலையிலுள்ள எகெட் கரித்தாஸ் அலுலகத்தில்  அருட்தந்தை டொக்டர் போல் ரொபின்ஷன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சர்வமத ஒன்றிய செயலாளர் முஹம்மத் றிஸ்மி இந்நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன் திருகோணமலை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான காரணிகளையும் தெளிவு படுத்தினார். பத்திர காளியம்மன் ஆலயத்தின் பிரதம குரு ஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள் […]

இலங்கை

இலங்கையில் வரி வசூலை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை!

  • January 4, 2024
  • 0 Comments

வரி வசூலை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், சட்ட நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து நீதி அமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்த வேண்டியவர்கள் என இனங்காணப்பட்ட வரி செலுத்துவோர் கூட வரி செலுத்தாதது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் 15 வருடங்கள் வரி செலுத்துவதில் தவறிழைக்க முடியும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 30.06.2023 அன்று நிலுவையில் உள்ள […]

இலங்கை

ஆசிரியர் நியமிக்காமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

  • January 4, 2024
  • 0 Comments

திருகோணமலை ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சையமற்றதாக காணப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட சமூக ஆர்வலர்கள் வருகை தந்திருந்தனர். பல வருட காலமாக குறித்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும் இது தொடர்பாக அரச மட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாக குறித்த விடயம் தொடர்பில் முறையிட தாம் வருகை தந்ததாகவும் தெரிவித்தனர். குறித்த […]

இலங்கை

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு நேர்ந்தக் கதி!

  • January 4, 2024
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கைதி சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த கைதி கொட்டவாகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என […]

இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு!

  • January 4, 2024
  • 0 Comments

நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடியை முதன்மையாகப் பாதித்த காரணிகளைக் குறிப்பிட்டு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது குறித்து துறைசார் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையின் ஊடாக, மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துள்ள மின் கட்டணத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிந்தது.