பொழுதுபோக்கு

லைகாவுடன் மோதும் விஷால்… பரபரப்பு புகார்

  • January 20, 2024
  • 0 Comments

நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் […]

இலங்கை

இலங்கை அமைச்சரவையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம் : வெளியான தகவல்!

  • January 20, 2024
  • 0 Comments

இன்னும் சில தினங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று இங்கு அமைச்சுப் பதவிகளைப் பெறவுள்ளது. பொதுஜன பெரமுன ஏற்கனவே அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்துள்ளது.

இலங்கை

இலங்கை : இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு

  • January 20, 2024
  • 0 Comments

இணையத்தள பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால், இந்தச் சட்டமூலம் இந்த தருணத்தில் நிறைவேற்றப்பட்டால், ஆணைக்குழு ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டு, அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு வரம்பற்ற அதிகாரம் கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் விவாதிக்கப்படவுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருக்கு இந்தக் கடிதத்தை […]

பொழுதுபோக்கு

மீணடும் வெடித்த சர்ச்சை.. த்ரிஷாவுக்கு விஜய் கொடுத்த நெக்லஸ்? யாருடா நீ????

  • January 20, 2024
  • 0 Comments

தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் என அனைவராலும் வர்ணிக்கப்பட்டாலும், ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும், அவரது குடும்பம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துகொண்டு தான் இருக்கின்றன. அண்மைக் காலங்களாக விஜய்க்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து பற்றிய செய்தியும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. எனினும் தனது மகளின் படிப்பு நடவடிக்கைகளுக்காக விஜயின் மனைவி லண்டனில் உள்ள தனது அப்பா வீட்டில் இருந்து வருவதாகவும், ஒவ்வொரு விடுமுறையின் போதும் விஜய் அங்கு ஓடிவிடுவார் என்றும் கூறப்பட்டு வருகின்றது. இந்த […]

இலங்கை

கிளிநொச்சி –  பன்னங்கண்டி பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

  • January 20, 2024
  • 0 Comments

கிளிநொச்சி –  பன்னங்கண்டி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது. பன்னங்கண்டி பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகாமையில் காணப்படும் கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மது போதையில் இருந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த நபர் சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஜெயராம் டினேஸ் எனும் இளைஞனே […]

இலங்கை

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் தென்னாபிரிக்க ஜனாதிபதியுடன் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு!

  • January 20, 2024
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாட்டுடன் இணைந்து ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள உலகளாவிய தெற்கு நாடுகளின் பல தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (19.01) பிற்பகல் இடம்பெற்றது. இங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தென்னாபிரிக்க ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதேவேளை, தான்சானியா […]

இலங்கை

இலங்கை பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுரை!

  • January 20, 2024
  • 0 Comments

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் கடமையாற்றும் போது வாகன போக்குவரத்தை சோதனைக்காக நிறுத்த வேண்டாம் என புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புதிய தொடர் அறிவுறுத்தல்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் நேற்று (19.01) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கடந்த 18ஆம் திகதி நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்த போதே இந்த புதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா

மத்திய சீனாவில் உள்ள விடுதியில் தீவிபத்து : 13 பேர் உயிரிழப்பு!

  • January 20, 2024
  • 0 Comments

மத்திய சீனாவில் யாங்ஷாங்புவில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். தங்கும் விடுதி கட்டிடம் ஒன்றில் நேற்று (19.01) இரவு தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, தனியார் பள்ளியான குறித்த  பள்ளியின் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பரில் சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்.

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்!

  • January 20, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் மசகு எண்ணெய்யின் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.41 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.56 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.51 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலகம்

ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆபத்தாக மாறிய அமெரிக்கா – அடுத்தடுத்து தாக்குதல்

  • January 20, 2024
  • 0 Comments

ஈரான் ஆதரவிலான ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஏமனில் அமெரிக்கா அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே வாரத்தில் நான்காவது முறையாக அமெரிக்க ராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதாய் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஹெளதி கிளர்ச்சிக் குழு எதிர்தாக்குதல் நடத்தும் திறனை இன்னமும் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியது. அதனால் வஷிங்டன் (Washington) தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகச் சொன்னது. ஹெளதி கிளர்ச்சிக் குழுவின் நோக்கம், இஸ்ரேலைத் தடுப்பது, அமெரிக்க, பிரித்தானிய ஆகாயப் படைகளின் ஆகாயத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பது மட்டுமே […]