இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சட்ட உதவி!

  • March 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் பயணிக்கப் போவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். கடந்த சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்டமை குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை மூன்று மாணவர்களிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது மாணவர்களுக்கான […]

இலங்கை செய்தி

வலுசக்தி பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

  • March 19, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராயப்பட்டுள்ளன. இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக வலுசக்தி விநியோகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொண்டுள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அதன் விளைவாக எதிர்வரும் மாதங்களில் உலக சந்தையில் ஏற்படக்கூடிய புதிய போக்குகள் குறித்து விரிவாகக் […]

ஐரோப்பா செய்தி

கென்ட் பகுதியில் மாணவர்களுக்கு மெனிஞ்சைடிஸ் பி தடுப்பூசி வழங்கப்படுகிறது

  • March 19, 2026
  • 0 Comments

கென்ட் (Kent) பகுதியில் மூளைக்காய்ச்சல் பரவலில் ஆறு புதிய பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மெனிஞ்சைடிஸ் பி (meningitis B) தடுப்பூசி வழங்கப்படுகிறது. சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) இந்த நோயின் “வேகமான பரவல்” முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆக உள்ளது எனக் கூறினார். இலக்கு வைத்து நடத்தப்பட்ட தடுப்பூசித் திட்டத்தில் இதுவரை சுமார் 1,500 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை இதுவரை ஏன் சிலர் இதில் சேர்க்கப்படவில்லை என கேள்விகளும் எழுந்துள்ளன. உறுதிசெய்யப்பட்ட […]

உலகம் செய்தி

ஈரானை கட்டுப்படுத்தி அமெரிக்கா போரில் வெற்றி பெற்றுள்ளது

  • March 19, 2026
  • 0 Comments

பென்டகன் செய்தியாளர் சந்திப்பில், பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) அமெரிக்காவின் போரின் நிலையை வலியுறுத்தினார். இங்கு மேலும் அவர் கூறியதாவது, “போர் சில விடயங்களில் எதிர்பார்த்த அளவுக்கு சிக்கலாக இருப்பினும், அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்கா ஈரான் மீது பெரும் சக்தியைப் பயன்படுத்தி, அதன் ஏவுகணைகள், தாக்குதல் தளங்கள் மற்றும் கடற்படையை அழித்து வருகிறது” என்றார். ஆனால், ஹார்முஸ் நீரிணை (Hormuz Strait) கட்டுப்பாடு, உலகளாவிய சந்தைகளில் ஏற்படும் தாக்கங்கள், ஈரான் மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள், கட்டாருக்கு […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணிநேர விசாரணை!

  • March 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த மாணவர்களிடமே இந்த நீண்டநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏற்கனவே கடந்த 10 ஆம் திகதி பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் பொலிஸார் […]

இலங்கை

முள்ளிப்பொத்தானையில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளை: நால்வர் கைது

  • March 19, 2026
  • 0 Comments

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையிடப்பட்ட சொத்துக்கள்: முதல் […]

இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு: பின்னணி என்ன?

  • March 19, 2026
  • 0 Comments

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விசாரணைக்கு அழைப்பது, வடக்கில் மீண்டும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியா என இலங்கை தமிழரசுக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் Gnanamuthu Srinesan இவ்வாறு வினா தொடுத்தார். “யாழ்.பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது வடக்கு மாகாணவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சமான சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும். மாணவர்களின் செயற்பாடுகளில் ஏதேனும் குறைப்பாடுகள் […]

இலங்கை செய்தி

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கல் -மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக நீதிமன்றில் தெரிவிப்பு

  • March 19, 2026
  • 0 Comments

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு  கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) அறிவித்துள்ளது. மேலதிகமாக, குறித்த பணம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 2015 ஆம் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் சைப்ரஸ்த் தளங்கள் மீதான விமர்சனங்கள் – எதிர்கால நிலை குறித்து பேச்சுவார்த்தை

  • March 19, 2026
  • 0 Comments

சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின்  அக்ரோடிரி (Akrotiri) மற்றும் டெகேலியா (Dhekelia) இரண்டுக்கும் இராணுவத் தளங்களுக்கு தொடர்பான நிலை மற்றும் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என சைப்ரஸ் (Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸ் (Nikos Christodoulides) தெரிவித்துள்ளார். அவர் இதை ஒரு காலனித்துவ விளைவு என்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் நிலைமை சீரானதும், பிரித்தானிய அரசாங்கத்துடன் வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடலை நடத்தப் போகிறோம் என பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் […]

உலகம் செய்தி

ஈரானின் ஏவுகணை, ட்ரோன்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைமறிக்கப்பட்டது

  • March 19, 2026
  • 0 Comments

ஈரான் (Iran) ஏவிய ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ஆளில்லா விமானங்களை (drones) ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) தனது வான் பாதுகாப்புப் படைகள் மூலம் இன்று இடைமறித்துள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 334 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,714 ஆளில்லா விமானங்கள் எதிர்கொண்டுள்ளதாகத் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களின் போது, இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் […]