இலங்கை செய்தி

ஞானசார தேரர் விடுதலையாகவில்லை

  • May 22, 2024
  • 0 Comments

வெசாக் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாய மற்றும் அமரபுர மகா சங்க சபையின் பீடாதிபதிகள், ஞானசார தேரரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா (பொதுபல சேனா) பொதுச் செயலாளர்  கலகொடஅத்தே […]

உலகம் செய்தி

இலங்கையில் பிறந்த ஒலிம்பிக் சாம்பியன் நீச்சல் வீரர் வில்கி காலமானார்

  • May 22, 2024
  • 0 Comments

பிரிட்டிஷ் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் டேவிட் வில்கி தனது 70வது வயதில் காலமானார். ஸ்காட் 1976 இல் மாண்ட்ரீலில் 200 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் தங்கம் வென்றார், அத்துடன் இரண்டு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் மூன்று உலக பட்டங்களை வென்றார். குடும்பத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டு அவரின் மறைவை உறுதிப்படுத்தியுள்ளனர். “டேவிட் வில்கி புற்றுநோயுடன் அவரது துணிச்சலான போரைத் தொடர்ந்து, இன்று காலை அவரது குடும்பத்தினரால் சூழப்பட்ட நிலையில் அமைதியாக இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் […]

இலங்கை செய்தி

சத்துணவை வழங்க லஞ்சம் கோரி தமிழ் பாடசாலை அதிபர் கைது

  • May 22, 2024
  • 0 Comments

சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் உணவை வழங்க, பெண்ணொருவரிடமிருந்து லஞ்சம் கோரியதாக கூறப்படும் அதிபர் ஒருவரை, லஞ்ச, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட எஹலியகொட பெருந்தோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். எஹலியகொட பெருந்தோட்டத்தில் வசிக்கும் பெண்ணொருவர், குறித்த பாடசாலைக்கான சத்துணவை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக உணவை வழங்க வேண்டும் என்றால், மாதாந்தம் […]

செய்தி தமிழ்நாடு

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய திருச்சி நீதிமன்றம்

  • May 22, 2024
  • 0 Comments

ரெட்ரெட் பிக்ஸ் வலைதளத்தில் சவுக்குசங்கரின் நேர்காண ஒளிபரப்பட்டது அந்த நேர்காணலில் தமிழக காவல்துறையில் பணியாற்ற பெண்களுக்கு குறித்து அவதூறு பேசிய தொடர்பாக ஏற்கனவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அவரது வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக விவாதத்தில் இந்த நேர்காணலை ஒளிபரப்பு செய்த இணையதளத்தின் எடிட்டரை ஏன் கைது செய்யவில்லை என தனது கருத்தை […]

இலங்கை செய்தி

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் – விசாரணையில் களமிறங்கிய விசேட குழு

  • May 22, 2024
  • 0 Comments

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அவர்களினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். அண்மையில் (20) இந்தியாவின் அஹமதாபாத்தில் நான்கு […]

உலகம் செய்தி

“ஹுய்யா” பறவையின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனை

  • May 22, 2024
  • 0 Comments

தற்போது அழிந்து வரும் நியூசிலாந்து “ஹுய்யா” பறவையின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்றுள்ளது. ஏலத்தில் இந்த இறகு 3,000 டொலருக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 28,400 டொலர்களுக்கு மேல் விற்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், தீர்மானிக்கப்பட்ட விலையை விடவும் 450 வீத மடங்கில் இந்த இறகு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வடக்குத் தீவுக்கு உரிய அழிந்துபோன ஒரு பறவையாக இந்த “ஹுய்யா” பறவை விளங்குகின்றது. இது உலக சாதனை என்று வெளிநாட்டு […]

இலங்கை செய்தி

`டாசன் பங்களா’ விற்பனைக்கு தயாராகி வருவதாக தகவல்

  • May 22, 2024
  • 0 Comments

கேகாலை மாவட்டத்தில் பெறுமதி மிக்க `டாசன் பங்களா’ விற்பனைக்கு தயாராகி வருவதாக சமகி ஜன பலவேக கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது ‘கேப்டன் டாசன்’ அவர்களால் கட்டப்பட்ட பங்களா தற்போது நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ளது என்றார். அந்த அதிகாரத்தின் கீழ் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக டாசன் பங்களா இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். டாசன் பங்களாவை ஊழியர்களுடன் […]

இலங்கை செய்தி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி வர்த்தமானி

  • May 22, 2024
  • 0 Comments

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று (21) வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் முதலாம் திகதி அறிவித்தார். இதன்படி தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1350 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன் உற்பத்தித்திறன் அடிப்படையில் அவர்களுக்கு 350 […]

இலங்கை செய்தி

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இடைநிறுத்தம்

  • May 22, 2024
  • 0 Comments

எதிர்வரும் LPL போட்டியில் பங்குபற்றவிருந்த தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா பிரிமியர் லீக் அறிவித்துள்ளது. LPL போட்டியின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக LPL ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அனில் மோகன் தெரிவித்தார். இம்பீரியல் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமிம் ரஹ்மான் எதிர்கொள்ளும் சட்ட விடயங்களை கருத்திற்கொண்டு மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஎல் போட்டியில் தம்புள்ளை தண்டர்ஸ் […]

உலகம் செய்தி

கத்தார் ஒப்பந்தத்தில் ஆறு குழந்தைகளை உக்ரைனுக்கு திருப்பி அனுப்பிய ரஷ்யா

  • May 22, 2024
  • 0 Comments

உக்ரைனில் நடந்த போரினால் இடம்பெயர்ந்த ஆறு குழந்தைகளை கத்தார் மூலம் ரஷ்யா திருப்பி அனுப்பியதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் உள்ள கத்தார் தூதரகத்தில் இரண்டு சகோதரர்கள் உட்பட ஆறு முதல் 17 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் கத்தாரின் தூதர் இருக்கும் வீடியோவை செய்தி நிறுவனம் வெளியிட்டது. உக்ரைன் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை, ஆனால் இந்த நிகழ்வில் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா லவோவா-பெலோவாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்து […]