ஐரோப்பா

இத்தாலி நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகில் குழந்தையொன்றின் சடலம் மீட்பு!

செவ்வாய்கிழமை துனிசியாவிலிருந்து இத்தாலி நோக்கிச் சென்ற சுமார் 85 புலம்பெயர்ந்தோர் கடலில் இருந்து மீட்கப்பட்டபோது ஐந்து மாத குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை ஒன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் தாய் மற்றும் 4 வயது சகோதரி ஆகியோர் குடியேற்றவாசிகள் ஏற்றிச் செல்ல தகுதியற்ற படகில் இரு நாட்களுக்கு முன்னர் துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டனர் என்று தொண்டு குழுவான SOS மனிதநேயம் தெரிவித்துள்ளது. SOS மனிதநேயம் பணியாளர்கள் அதன் “Humanity 1” […]

இலங்கை செய்தி

பாடசலை மாணவர்களால் தாக்கப்பட்டு இறந்தவரின் உடல் ரகசியமாக தோண்டியெடுப்பு

  • May 28, 2024
  • 0 Comments

வெலிப்பன்ன, கல்மட்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கணவரின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். பெப்ரவரி 14, 2023 அன்று, கல்மட்ட பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 35 வயதான டொன் ரங்க விராஜ் ஜயசிங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தை கொல்லப்பட்டார். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் நினைவுச் […]

உலகம் செய்தி

நீண்ட காலம் விமானப் பணிப்பொண்ணாக பணியாற்றி சாதனை படைத்த பெட்டி நாஷ் காலமானார்

  • May 28, 2024
  • 0 Comments

பாஸ்டன்: விமானப் பணிப்பெண்ணான பெட்டி நாஷ் தனது 67 வருட வானில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உலகிலேயே அதிக காலம் பணியாற்றிய விமானப் பணிப்பெண்ணான பெட்டி நாஷ் தனது 88வது வயதில் காலமானார். அமெரிக்காவில் பல்வேறு விமான நிறுவனங்களில் அவர் பணியாற்றினார். 1957 இல் கிழக்கு ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.  பெட்டி நாஷ் 2022 இல் நீண்ட காலம் பணியாற்றிய விமானப் பணிப்பெண் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். […]

செய்தி விளையாட்டு

இந்திய பிரதமர் உட்பட போலி பெயரில் BCCIக்கு வந்த விண்ணப்பங்கள்

  • May 28, 2024
  • 0 Comments

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் […]

ஐரோப்பா

விரைவில் உக்ரேனிய பயிற்சி மையங்களுக்கு செல்லும் பிரெஞ்சு இராணுவ பயிற்றுனர்கள்

பிரெஞ்சு இராணுவ பயிற்றுனர்கள் விரைவில் உக்ரேனிய பயிற்சி மையங்களுக்குச் செல்லவுள்ளதாக உக்ரைன் தளபதி தெரிவித்துள்ளார் உக்ரைனின் உயர்மட்ட தளபதி பிரெஞ்சு இராணுவ பயிற்றுனர்கள் உக்ரேனிய பயிற்சி மையங்களுக்கு விரைவில் செல்ல அனுமதிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டதாக கூறினார். “உக்ரேனிய சேவையாளர்களுக்கு பயிற்சி அளிக்க உக்ரைனுக்கு பயிற்றுவிப்பாளர்களை அனுப்பும் பிரான்சின் முன்முயற்சியை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ஓலெக்சாண்டர் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா செய்தி

மேற்குலகில் அமைதியை ஏற்படுத்த இதுவே ஒரே வழி – ஸ்பெயின் பிரதமர்

  • May 28, 2024
  • 0 Comments

மாட்ரிட்: பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் முடிவை ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. காஸாவில் இஸ்ரேலிய வன்முறைகள் தொடரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் எண்ணிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பினர்களில் 146 ஆக உயர்ந்துள்ளது. பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதுதான் மேற்குலகில் அமைதியை ஏற்படுத்த ஒரே வழி என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறினார். […]

ஐரோப்பா செய்தி

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் மசோதாவை டென்மார்க் நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது

  • May 28, 2024
  • 0 Comments

கோபன்ஹேகன்: பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் மசோதாவை டேனிஷ் நாடாளுமன்றம் நிராகரித்தது. இது குறித்து டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லொக்கி ராஸ்முசென் கூறுகையில், பாலஸ்தீனம் சுதந்திர நாடாக கருதுவதற்கு தேவையான நிபந்தனைகள் இல்லை. நான்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் பெப்ரவரியில் முதன்முதலில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரலில் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றபோது, ​​பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கு அங்குள்ள சூழ்நிலைகள் அவசியமில்லை என்று வெளியுறவு அமைச்சர் கூறியிருந்தார். தற்போது இந்த […]

செய்தி விளையாட்டு

செல்சியாவுக்கு பயிற்சியாளராகிரார் என்ஸோ மாரெஸ்கா

  • May 28, 2024
  • 0 Comments

லண்டன்: செல்சியின் புதிய பயிற்சியாளராக இத்தாலியின் லீசெஸ்டர் சிட்டியின் பயிற்சியாளர் என்ஸோ மாரெஸ்கா பதவியேற்கவுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு கழகத்தை விட்டு வெளியேறிய மொரிசியோ போச்செட்டினோவுக்கு மாற்று இடம் கிடைத்துள்ளது என்ற செய்தியை ஃபேப்ரிசியோ ரோமானோ மற்றும் பலர் உறுதிப்படுத்தினாலும்,  கழகம் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. 2029ஆம் ஆண்டு வரையிலான ஐந்து வருட கால ஒப்பந்தத்துக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒப்பந்தம் 2030 வரை நீட்டிக்கப்படலாம். லீசெஸ்டர் சிட்டிக்கு செல்சி 10 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் எனத் […]

செய்தி பொழுதுபோக்கு

விஜய்யின் GOAT திரைப்படம் – இலங்கையில் படப்பிடிப்பு ஆரம்பம்

  • May 28, 2024
  • 0 Comments

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் The Greatest of All Time (GOAT) திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்கள் இலங்கையில் தற்போது ஒளிபதிவு செய்யப்பட்டு வருகின்றன. காலி, கண்டி உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்புக்கள் தற்போது இடம்பெற்று வருவதாக அறிய முடிகின்றது. இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் மோகன் உள்ளிட்ட பலர் இலங்கையில் இடம்பெறும் படப்பிடிப்புக்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதேவேளை, தளபதி விஜய்யின் காட்சி அனைத்தும் ஒளிபதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் எஞ்சிய காட்சிகள் […]

இலங்கை செய்தி

மரம் முறிந்து விழுந்ததில் பெண் பலி – வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட தாமதம்

  • May 28, 2024
  • 0 Comments

கஹவத்தை ஓபாட தோட்டத்தின் மூன்றாம் பிரிவில் தேயிலை  செடிகளுக்கு உரமிட்டு கொண்டிருந்த பெண்கள் மீது  மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 46 வயதான தமிழ்ச்செல்வி என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக பாரிய மரம் விழுந்ததுடன், மரத்தடியில் இருந்த மூன்று பெண்களையும் தோட்டத் தொழிலாளர்கள் குழுவினால் வெளியே இழுத்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர்களில் ஒருவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். […]