இலங்கை செய்தி

இலங்கை மீனவர்மீது இந்தியாவில் தாக்குதல்: அமைச்சர் கண்டனம்!

  • April 29, 2026
  • 0 Comments

இலங்கை மீனவரொருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது என அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். “ இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து […]

ஐரோப்பா

உயிர் தியாகம் செய்ய அழைப்பு : சர்ச்சை பதிவால் பிரித்தானியாவில் பதற்றம்!

  • April 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள ஈரானியர்கள் “தாய்நாட்டிற்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்” என்று தெஹ்ரான் தூதரகம் விடுத்த அழைப்பு குறித்து பெருநகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளிநாடுகளில் வாழும் ஈரானியர்கள் ஆட்சிக்காகத் தியாகிகளாக மாற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் ஒரு செய்தியைத் தூதரகத்தின் டெலிகிராம் சேனல் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. மேற்படி பதிவின் மீது நடவடிக்கை தேவையா என்பதை மதிப்பிடுவதற்காக, பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தற்போது  ஆய்வு செய்து வருகிறது. அதேநேரம்  “ஜன்ஃபதா” அல்லது சுய தியாக […]

இலங்கை செய்தி

தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!

  • April 29, 2026
  • 0 Comments

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவும், ரஜீவர்மனின் 19 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (28) இடம்பெற்றது. யாழ் ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளரும் யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகருமான ரட்ணம் தயாபரன் சிவராமின் திருவுருவப் படத்துக்கும், ரஜீவர்மனின் திருவுருவப்படத்துக்கு யாழ்.ஊடக அமையத்தின் பொருளாளரும் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியருமான கம்சனும் மலர் மாலைகளை அணிவித்தனர். பொதுச் சுடரினை […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் கடத்தப்பட்ட சிறுமியை தேடி தொடர்கிறது வேட்டை!

  • April 29, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் கடத்தப்பட்ட சிறுமியை தேடும் பணி இன்று 4 ஆவது நாளாக தொடர்கின்றது. சிறையிலிருந்து விடுதலையான ஜெபர்சன் லூயிஸ் என்பவராலேயே அச்சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதில் இருந்து தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது. தற்போது நான்காவது நாளை எட்டியுள்ள இந்தத் தீவிரத் தேடுதல் வேட்டையில், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் குதிரைப்படை வீரர்களுடன் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் இணைந்துள்ளனர். அந்தச் சிறுமி இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் அதிகாரிகள், அப்பகுதியின் கரடுமுரடான நிலப்பரப்பில் […]

இலங்கை

‘ஏஹிபஸ்ஸிகோ’ குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

  • April 29, 2026
  • 0 Comments

உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கும், பௌத்த மதத்தின் உரிமையை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்வதற்குமாக இலங்கையில் 07 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணத்தை நிறைவு செய்துகொண்டு, வியட்நாம் தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று (29) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். அமெரிக்காவில் வசிக்கும் வியட்நாம் தேரர் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட பிக்குகள், ‘அலோகா’ நாய் மற்றும் ஏனையோர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகர் நோக்கிப் புறப்பட்டனர். அங்கிருந்து […]

இலங்கை

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

  • April 29, 2026
  • 0 Comments

நடைமுறையிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அத்துடன், சுகாதாரம், மின்சாரம், நீர், பெற்றோலிய விநியோகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசியல் இலங்கை செய்தி

தையிட்டி விவகாரத்தில் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது!

  • April 29, 2026
  • 0 Comments

“NPP ஆட்சிக் காலத்தில் விகாரைத் தேவைகளுக்காக மக்களின் காணிகள் ஒருபோதும் சுவீகரிக்கப்படமாட்டாது” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியாகத் தெரிவித்தார். காணி அளவீட்டுப் பணிகளின் போது ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் அது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், “நாம் ஏற்கனவே பலமுறை கூறியது போல, மக்களின் காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தையிட்டி […]

உலகம்

தொடர் பதற்றம் : OPEC கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்!

  • April 29, 2026
  • 0 Comments

OPEC நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த விலகல் மே 1 முதல் நடைமுறைக்கு வரும். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி அமைச்சர் சுஹைல் முகமது அல்-மஸ்ரூயி ( Suhail Mohamed al-Mazrouei), பிராந்திய வல்லரசின் எரிசக்தி உத்திகளைக் கவனமாக ஆய்வு செய்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குழுக்களுக்கும் அவற்றின் நடைமுறைத் […]

விளையாட்டு

பஞ்சாப் அணியை பந்தாடியது ராஜஸ்தான்!

  • April 29, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 40 ஆவது லீக் ஆட்டத்தில் Rajasthan Royals அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Punjab Kings அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (59) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (29) ஜோடி அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. பின்னர் வந்த அணித் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 30 ஓட்டங்கள் எடுக்க, ஆட்டத்தின் போக்கை மாற்றிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், வெறும் 22 பந்துகளில் 62 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 6 […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஸ்டாமருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த எம்.பிகள் : பிரதமர் பதவி பறிபோக வாய்ப்பு!

  • April 29, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டாமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினாரா என்பது தொடர்பில் விசாரணையை தொடங்குவதற்கு ஏதுவாக  15 தொழிற்கட்சி எம்.பிகள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். லார்ட் மாண்டல்சன்  (Lord Mandelson) அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்கப்பட்டது தொடர்பாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள  நிலையில் இந்த வாக்களிப்பு வந்துள்ளது. 223க்கு 335 என்ற வாக்கு வித்தியாசத்தில் வாக்களிக்கப்பட்ட  அதேநேரம் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். இரு எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற […]