இலங்கை செய்தி

தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தராக்கி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவும், ரஜீவர்மனின் 19 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (28) இடம்பெற்றது.

யாழ் ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளரும் யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகருமான ரட்ணம் தயாபரன் சிவராமின் திருவுருவப் படத்துக்கும், ரஜீவர்மனின் திருவுருவப்படத்துக்கு யாழ்.ஊடக அமையத்தின் பொருளாளரும் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியருமான கம்சனும் மலர் மாலைகளை அணிவித்தனர்.

பொதுச் சுடரினை ஊடக செயற்பாட்டாளர் புவனேந்திரனும், ஊடகவியலாளர் சபேசும் ஏற்றி வைத்தனர்.

ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2005 ஏப்ரல் 28 ஆம் திகதி பாதுகாப்பு மிகுந்த இலங்கையின் தலைநகரான கொழும்பில் நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்துக் கடத்தப்பட்டுச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

ஊடகவியலாளர் ரஜீவர்மன் 2007 ஏப்ரல் 29 ஆம் திகதி யாழ்.நகர்ப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இரு ஊடகவியலாளர்களின் படுகொலைகள் அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அரசுகள் மாறினாலும் இந்த ஊடகவியலாளரான இருவருக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!