வாழ்வியல்

அளவிற்கு அதிக எலுமிச்சை ஜூஸ் பேராபத்து

  • January 21, 2025
  • 0 Comments

வைட்டமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது என்பதோடு, சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சிட்ரஸ் பழமான எலுமிச்சையின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் எழுந்தவுடன் குடித்து வந்தால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். இதனுடன், எலுமிச்சை நமது செரிமானத்தை வலுப்படுத்தி, வயிறு தொடர்பான பல […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் அமெரிக்கா – உத்தரவில் டிரம்ப் கையெழுத்து

  • January 21, 2025
  • 0 Comments

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளது. அதற்கமைய, அந்த உத்தரவில் புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கொவிட் தொற்றுநோய் மற்றும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளை உலகளாவிய சுகாதார அமைப்பு தவறாகக் கையாண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது 12 மாதங்களில் ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் மற்றும் அதன் பணிக்கான அனைத்து நிதி பங்களிப்புகளையும் நிறுத்தும். WHO இன் மிகப்பெரிய நிதி […]

ஆசியா செய்தி

பாகிஸ்தான் இராணுவ வாகனத் தொடரணி மீது தாக்குதல்

  • January 21, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவ வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குவெட்டாவிலிருந்து ரேடார் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளின் தொடரணி கலாட் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​தொடரணிக்கு அருகில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை இராணுவம் (BLA) என்ற ஆயுதக் குழு பொறுப்பேற்றுள்ளது. ஒரு அறிக்கையில், அதன் செய்தித் தொடர்பாளர் ஜீயாந்த் பலோச், அந்தக் குழு ரிமோட் கண்ட்ரோலின் உதவியுடன் வெடிப்பைச் செய்ததாகக் […]

செய்தி விளையாட்டு

ரஞ்சி கோப்பை – மும்பை அணியில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால்

  • January 21, 2025
  • 0 Comments

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி ஜம்மு & காஷ்மீர் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் மும்பையில் உள்ள எம்சிஏ-பிகேசி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக அஜிங்க்ய ரஹானே தொடர்கிறார். சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் தேவைக்கு அதிகமான அளவு அரிசி உள்ளது – ஜனாதிபதி அநுரகுமார

  • January 21, 2025
  • 0 Comments

இலங்கையில் தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை – கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மதிப்பிடப்பட்ட அரிசியை விட இரண்டு மடங்கு அரிசித் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், பிரதான அரிசி விற்பனையாளர் ஒருவர் வரி செலுத்துவதிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். தற்போது தேவைக்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப் வழங்கிய வாக்குறுதி

  • January 21, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனல்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ளார். அமெரிக்காவிற்குப் பொற்காலம் என்று 78 வயது டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் அமைதிகாப்பாளராக, அனைவரையும் ஒன்றிணைப்பவராக இருப்பதற்கு உறுதியளித்துள்ளார். வெளிநாட்டு போர்களை முடிவுக்குக்கொண்டுவருதல், அமெரிக்க எல்லைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தவிருப்பதாக அவர் கூறினார். அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவோம் என்ற முழக்கவரியை டிரம்ப் எப்போதும் வலியுறுத்தியிருக்கிறார். உலகளவில் அமெரிக்கா மீண்டும் மதிக்கப்படும் என்று அவர் தொடக்க உறையில் கூறினார். வெள்ளை மாளிகைக்கு டிர்ம்பையும் அவர் துணைவியாரையும் ஜோ பைடன் […]

செய்தி

மெல்போர்னில் 51,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை

  • January 21, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா – மெல்போர்னில் 51,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை 51,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை அமைக்க திட்டங்கள் உள்ளன. இதற்காக 3 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 3000 மீட்டர் நீளம் கொண்டது என்பதும் தனித்துவமானது. இந்தப் புதிய மேம்பாட்டுத் திட்டம் மெல்பர்னியர்களுக்கு சுமார் 51,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போர்ன் விமான நிலைய தலைமை நிர்வாக அதிகாரி லாரி ஆர்கஸ் இந்த […]

உலகம் செய்தி

உலக நாடுகளில் கடைகளில் அதிகம் திருடப்படும் பொருட்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • January 21, 2025
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கடைகளில் இருந்து அதிகம் திருடப்படும் பொருட்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. World of Statistics வலைத்தளத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, அமெரிக்காவில் இறைச்சி அதிகமாகத் திருடப்படுவதாகவும், பிரான்ஸ் மற்றும் கனடாவில் சீஸ் அதிகமாகத் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இங்கிலாந்தில் பொட்டலமிடப்பட்ட இறைச்சிகளும், ஜெர்மனியில் சாக்லேட்டுகளும் அடிக்கடி திருடப்படும் பொருட்களில் அடங்கும். மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவில், சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் முறையே திருடர்களால் அடிக்கடி திருடப்படும் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் முழு வீட்டையும் தகர்க்க முயன்ற நபரால் பரபரப்பு

  • January 21, 2025
  • 0 Comments

  ஜெர்மனியில் எஸன் நகரத்தில் முழு வீட்டையும் தகர்க்க முயன்ற நபரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது பொலிஸாரின் உதவியின் மூலம் அவரை கட்டுப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. எஸன் நகரத்தில் 44 வயதுடைய நபரானவர் தனது வீட்டை குண்டு வைத்து தாக்கவுள்ளதாக தகவல் வெளியியுள்ளது. வீட்டில் உள்ள வெப்ப மூட்டியை தாக்குதல் செய்வதன் மூலம் முழு வீட்டையும் தகர்க்க போவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணத்தினால் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்த நிலையில் குறித்த நபருடன் பேச்சு வார்த்தையை நடத்தியதன் மூலம் அவரை […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் உட்பட இருவர் – அதிகாரிகள் அதிர்ச்சி

  • January 21, 2025
  • 0 Comments

இரண்டு விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 66.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. முதல் பயணி ஹம்பாந்தோட்டை, கட்டுவான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஆவார், அவர் தற்போது கொஸ்கமாவில் உள்ள சாலாவ இராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். மற்ற பயணி அம்பாறை, மஹாஓயாவைச் சேர்ந்த 30 வயதுடைய ஒரு பெண், […]